கொழும்பு: பிரதேசத்தில் இருக்கும் நிலைமை காரணமாக ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற பயத்தை கொண்டுள்ள வாக்களார்கள் வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளரின் அனுமதியினை கோறும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்தவர்கள் தமது விண்ணப்பங்களை நாளை 12 ஆம் திகதி மாலை 4.00 மணிக்குள் தேர்தல் செயலகத்தில் கையளிக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டியுள்ளது.
மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் இவ்வாறு வாக்களிக்கவுள்ளவர்கள் மேலதிக விபரங்களை சேவை அடிப்படையில் தெரிந்து கொள்ளவிரும்பின் 0325670738, 0711020648 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Leave a comment