Author: yourkattankudy.com
-
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்தரணிகள் ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கடிதம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது சட்டத்தரணிகள் ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 25-03-2015ம் திகதி அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
-
இறுதி மூச்சுடன் ஒரு முன்னால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
பின்வரும் விடயம் யாரையும் புன்படுத்துவதற்கோ அல்லது புதிய அரசை கேவலப்படுத்துவதற்கோ அல்ல இதன் பிறகு என்னால் எந்தவிதமான முயற்சிகளும் செய்ய முடியாத நிலையில் மக்கள் எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன். திருகோணமலை: திருகோணமலை மாவட்ட செயலகத்தின் கீழ் உள்ள ஒரு பிரபல்யமான பிரதேச செயலகத்தில் முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினதும் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்
-
இணக்கப்பாட்டு அரசியல் சரணாகதி அரசியலாக மாறுமாயின் முரண்பாட்டு அரசியலே ஒரே வழி வை.எல்.எஸ்.ஹமீட்
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: சமகால அரசியலில் பேசப்பட்டு வரும் விடயமான தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பாராளுமன்ற தேர்தல் விகிதாசார முறையினை மாற்றியமைத்து தொகுதிவாரியான தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்தும் செயற்திட்டமானது தற்பொழுது அரசியல் உயர் மட்டங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
-
நியுசிலாந்து உலகக் கிண்ணத்தை வெற்றிபெற வேண்டும்
– MJ மெல்போன்: ‘உலகக் கிண்ணக் கிரிக்கட் 2015’ இறுதிப்போட்டிக்கு இருப்பது இன்னும் சில மணி நேரங்களே. இந்நிலையில் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் எதிலும் தோல்வியைத் தழுவாமல், 40 வருட உலகக் கிண்ணக் கிரிக்கட் வரலாற்றில் நியுசிலாந்து முதன் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கின்றது.
-
“நியுசிலாந்துக்கு பதிலடி கொடுத்து உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவோம்”: கிளார்க்
மெல்போன்: உலகக்கிண்ண லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்திடம் நாங்கள் அடைந்த தோல்விக்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்கப் போவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார். உலகக்கிண்ணத் தொடரில் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
-
இணையத்தில் மதத்தீவரவாதத்தை எதிர்க்க ஐரோப்பிய முஸ்லீம்களின் புதிய இணைய இதழ்
லண்டன்: ஐரோப்பா முழுவதிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இணைந்து ஒரு ஒன்லைன் பத்திரிகையை தொடங்கியுள்ளனர். இது, மதத் தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களுக்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளின் பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது.
-
அலுவலகங்களில் உட்கார்ந்து வேலைபார்ப்பது ஆரோக்கியத்துக்கு கேடு
லண்டன்: அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் என்று பிரிட்டனில் புதிய பிரசாரம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டு இருப்பது பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாவதாகவும் உடற்பயிற்சி கூடத்தில் உழைப்பதன் மூலம் கூட அவற்றை சரிசெய்வது சிரமம் என்றும் On Your Feet Britain என்ற பிரிட்டிஷ் நிறுவனம் கூறுகின்றது.
-
அல்குர்ஆன் பயிற்சி மன்றமும் பாராட்டு நிகழ்வும்
– ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி தஜ்வீதுல் குர்ஆன் பயிற்சி கல்லுரியின் 2015ம் ஆண்டிக்கான முதலாவது பயிற்சி மன்றமும் பாராடடு நிகழ்வும் (2015.03.27 வெள்ளி) முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் புஹாரி மண்டபத்தில் தலைவர் றவுப் ஏ மஜீட் தலைமையில் நடைபெற்றது.
-
அலிசாகிர் மௌலானாவின் வெற்றிடத்துக்கு நஸீர் தெரிவு
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் நகரசபையின் தவிசாளராக கடமையாற்றிய அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டதால், நகரசபையில் ஏற்பட்ட உறுப்பினர் வெற்றிடத்துக்கு தேசிய காங்கிரஸ் சார்பாக பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
-
யு.எல். ஜெய்னுதீன் ‘இலங்கை தர நிர்ணய சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக’ நியமிக்கப்பட்டுள்ளார்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கைத்தொழில் வர்தக வாணிபத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதீயுதீன் அவர்களினால், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் MS. சுபைர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்னால் மட்டகளப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் UL. ஜெய்னுதீன் “இலங்கை தர நிர்ணய சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நாடு முழுவதிலும் இலவச வைபை சேவை: கோட்டை ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை ஆரம்பம்!!
கொழும்பு: நாட்டில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.