Author: yourkattankudy.com
-
17 நாட்களில் 330 கிலோ மீற்றர் ஒளிக்கான யாத்திரை குழுவுக்கு காத்தான்குடியில் நிதி வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தவிர்க்ககூடிய குருட்டுதன்மையை நீக்குவதற்கு விஷன் 2020 எனும் முயற்சிகளுக்கு நன்கொடையைளர்கள் மிக முக்கிய பங்கை ஆற்றிவருவதன் நோக்காகக் கொண்டு சுகாதார அமைச்சின் விஷன் 2020 செயலகத்தின் ஏற்பாட்டில் பார்வைக்காக கிழக்கிலிருந்து மேற்கிற்கு நடக்க நாம் உறுதியளிப்போமா? எனும் தொனிப்பொருளில் ஒளிக்கான யாத்திரை (26) வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகி காத்தான்குடியை வந்தடைந்தது.
-
தடுமாறும் சம்மேளனம்
காத்தான்குடி: கடந்த சில நாட்களுக்கு முன்னால் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒரு கலாச்சார சீர்கேடு தொடர்பாக தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் M. ஸஹ்றான் மௌலவியின் விமர்சனம் உலக மக்களைத் திரும்பச்செய்தது. மேலும் அக்கலாச்சார சீரழிவை அரங்கேற்றிவைத்த பாடசாலையின் அதிபரும் சம்மேளனத்தின் உறுப்பினருமான MCMA. சத்தார் ஆசிரியருக்கு கடுமையான கண்டனமும் விடுக்கப்பட்டது.
-
இரு தரப்பு ‘அள்ளக்கைகளும்’ ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளே!
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாலிபிடிப்பதற்கென்றே அள்ளக்கை ஆதரவாளர்கள் பல பாகங்களிலும் இருந்து வருகின்றபோதிலும், காத்தான்குடியைப் பொருத்தமட்டில் அரசியல் அள்ளக்கைகள் தனிச் சிறப்பைப் பெறுகின்றனர்.
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையை கண்டு தான் அச்சம் கொள்ளப்போவதில்லை
கொழும்பு: வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை கண்டே தமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
-
கோடு தாண்டுவது தடை!
கொழும்பு: பாதையின் வெள்ளை நிற கோடுகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசையை மீறி, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாளை (26) மு.ப 6.00 முதல் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
தப்பியோட முயன்ற 17 வயது யுவதி கொல்லப்பட்டார்!
ரக்கா: ஐ.எஸ் விளம்பர போஸ்டர்களுக்கு போஸ் கொடுத்த 17 வயது அவுஸ்திரேலிய யுவதி சிரியாவில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரியாவைச் சேர்ந்த சம்ரா கெசினோவிச்(17) மற்றும் அவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றனர்.
-
கல்குடா தெளஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: கல்குடா தெளஹீத் ஜமாத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் செம்மன்ணோடை தாருஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று புதன்கிழமை 25.11.2015 இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. கல்குடா தெளஹீத் ஜமாத்தினால் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு செய்யப்படுக்கின்ற இரத்தான முகாமில் அனேகமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தாலும்
-
அமைச்சரவை அங்கீகரித்த அனைத்து மௌலவி ஆசிரியர் நியமனங்களும் அவசரமாக வழங்கப்படல் வேண்டும்
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அரசிடம் கோரிக்கை கரீம் ஏ.மிஸ்காத் பொத்துவில்: மஹிந்த ராஜபக்ஷ அரசு ஆட்சியில், அமைச்சரவை அங்கீகரித்து, இன்னும் வழங்கப்படாதுள்ள அனைத்து மௌலவி ஆசிரியர் நியமனங்களும் அவசரமாக வழங்கப்படவேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நல்லாட்சி அரசு அவசரமாக எடுக்கவேண்டும். அதற்காக முழு மந்திரி மற்றும் அரை மந்திரி பதவிகளை, பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும், அமைச்சரவையிலும், அமைச்சரவைக்கு வெளியேயும். பாராளுமன்றத்திலும் உரத்துக்குரல் கொடுக்கவேண்டும்.
-
துனிசியாவில் தாக்குதல்: அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் 12 பேர் பலி!
– AF-90 துணிஸ்: துனிசியா நாட்டில் அதிபரின் பாதுகாப்பு வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஷின் எல் அபிடின் பென்அலி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
-
ரி20 உலகக் கிண்ணம்: முழுப் பலத்துடன் களமிறங்குவோம்
கொழும்பு: எதிர்வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத்திற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையையும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் என இலங்கை 20க்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.20க்கு20 உலகக் கிண்ண இலங்கை அணிக்கு அனுசரணை வழங்கும் நிகழ்வில் உரையாற்று கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
-
உயிரிழந்த இலங்கை ஐ.எஸ் தீவிரவாதியும் புதிதாக இணைந்த உறுப்பினர்களும்..
கொழும்பு: முகமது முஹைடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தனது விருப்பதுடனே தங்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால் வெளியிடப்படும் டொபிக் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. முகமது முஹைடீன் சர்னாஸ் நிலாம் எனப்படும் நிலாம் டீன் என்கின்ற இலங்கை நபர் குடும்ப உறுப்பினர்கள் 16 பேருடன் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், அவர்களில் 6 பிள்ளைகளும் உள்ளடக்கப்படுவதாக அந்த பத்திரிகையில் சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.