Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமெரிக்காவில் கடற்படை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு: 13 பேர் பலி

    வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடற்படைத் தளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் இருவர் பொலீஸ் அதிகாரிகள் என்றும் தெரியவந்துள்ளது.

  • கிண்ணியா நகரசபையில் இலவச மருத்துவ முகாம்

    – ரைஸ் கிண்ணியா: 2013 ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தினையொட்டி நடைபெற்றுவரும் செயற்பாடுகளில் இலவச மருத்துவ முகாமொன்று கிண்ணியா நகரசபையில் இன்று  கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

  • புத்தளத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 12 வது நினைவுதின நிகழ்வு

    – றிஸ்கான் முகம்மட் புத்தளம்: ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 12 வது நினைவுதின நிகழ்வு  புத்தளம் நுஹூமான் மண்டபத்தில் நடை பெற்றது.  இந்நிகழ்வில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்  மற்றும் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

  • ஒருநாள் தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு

    – MJ லண்டன்: இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ‘நெட்வெஸ்ட் ‘சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை 2:1 என்ற வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது. இரு போட்டிகள் மழைகாரணமாக முடிவுகள் பெறப்படவில்லை.

  • ஏழாயிரம் வருடகால நீண்ட வரலாறு கொண்டது பருத்தி ஆடைப் பாவனை

    பருத்தி அயன மண்டலப் பகுதிகளில் மட்டுமே விளையும் இழைப் பயிராகும். செடியிலிருந்து நாம் பலவிதமாக பயன்படுத்தும் மெதுமையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம்.

  • பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகம் நன்றி தெரிவிக்கிறது

    அஸ்ஸலாமு அழைக்கும் பூநொச்சிமுனை: கடந்த ஒரு மாதகாலமாக எமது பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரீமியர் லீக் T20 சுற்றுபோட்டி நேற்றையதினம் இறுதிபோட்டியுடன் நிறைவுபெற்றது.  இச்சுற்றுபோட்டியில் எமது அணியினர் வெற்றிபெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

  • இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டம் மட்டக்களப்பு-பிரதியமைச்சர் வி.முரளிதரன்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில்

  • ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு:  ‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு நேற்றுக்  காலை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

  • சமாதான நீதவான்கள் ஸ்தாபனத்தில் பதிவு மேற்கொள்ளல்

    – ரைஸ் கிழக்கு:  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சமாதான நீதவான்களாக பதவியிலுள்ளவர்களை   ஒரே செயற்பாட்டுக்கான அமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் கிழக்கு மாகாண சமாதான நீதவான்கள் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விஸ்தாபனத்தில் அங்கத்தவர்களாக இணைய சமாதான நீதவான்களாக இருக்கின்றவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அதன் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங் மட்டு விஜயம்-அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிலைமைகள் குறித்து ஆராய்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

  • ஸ்ரீ .ல.மு.கா சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம் அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ தமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் -அமைச்சர் ஹக்கீம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மாத்தளை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம் என்றும், அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ தமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட அக் கட்சியின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து கொண்டே

  • அன்புத் தலைவா

    பிரகாசக்கவி அன்புத் தலைவன் நீங்கள் ஐயா அந்ததரத்தில் அஷ் ஷஹீதாகி போனீர் ஐயா

←Previous Page
1 … 945 946 947 948 949 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar