Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியிலிருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் மடல்

    – A. அப்துல் ஹமீட் காத்தான்குடி: கடந்த 30 வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகமாக வட-கிழக்கு மக்கள் இருந்து வருகின்றனர். இன்று வரைக்கும் எங்களுக்கு ஏற்பட்ட உயிரகள் மற்றும் சொத்துக்களின் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது.

  • அளுத்கமை, தர்கா நகர்  வன்முறைகள்: கிண்ணியா நகரசபையில் கண்டன பிரேரனை!

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபையின் 39 வது சபை அமர்வு கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது. நாட்டில் தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் மத வன்முறை சம்பந்தமான கண்டனப் பிரேரனை முன்வைக்கப்பட்டது.

  • பயங்கரவாதி பொதுபலசேனாவுக்கு எதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்

    – MJ லண்டன்: இலங்கையின் பயங்கரவாத அமைப்பாக விஸ்வரூபம்பெற்று, அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும், பள்ளிவாயல்களையும் சூரையாடிவரும் அரசாங்க ஆதரவுப்படையான பொதுபலசேனாவுக்கு எதிரான இரண்டாவது கண்டனத்தைத் தெரிவிக்க பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

  • சேதங்களைக் குறைவாக மதிப்பீட்டுவதில் பொலீசார் தீவிரம்! எச்சரிக்கையாக இருக்குமாறு களத்திலிருந்து NFGG வேண்டுகோள் விடுக்கிறது!!

    – PMGG ஊடகப்பிரிவு களுத்துறை:  நடைபெற்ற தென்னிலங்கை வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வதிவிடங்களுக்கு நேரடியாகச் செல்லும் பொலிசார், அங்கு பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடம் ஏற்பட்டிருக்கும் சேதத்தின் உண்மையான பெறுமதியைக் குறிப்பிடாமல் குறைவான பெறுமதியைக் குறிப்பிட்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்து கையொப்பங்களைப் பெற்று வருவதாக தற்போது களத்தில் நின்று கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அரசியல் தலைமைத்துவ சபை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

  • அளுத்கமவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அளுத்கம, பேருவலவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு தனது நன்றியை தெரிவித்துள்ளது.

  • ஹிஸ்புல்லாஹ் கிண்ணம்-2014 இறுதிப்போட்டி

    – FM. பர்ஹான், KFL காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கினால் (KFL), காத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஹிஸ்புல்லாஹ் கிண்ணத்துக்கான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, எதிர்வரும் 20–6-2014 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

  • அளுத்கம தாக்குதல்: கட்டார்வாழ் இலங்கை முஸ்லிம்களின் கண்டணமும், உதவியும்

    – கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா  டோஹா: இலங்கையில் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனவாதிகளின் தாக்குதலினால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ள முஸ்லிம் மக்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினை கட்டார் வாழ் இலங்கை மக்கள் தெரிவித்துள்ள அதே வேளை இம்மக்களினது விமோசனத்திற்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • ‘அளுத்கமவில் ஆரம்பமான கலவரம் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் பாதுகாக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்’ – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அளுத்கமவில் பௌத்த துறவிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையே ஆரம்பமான கலவரம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமலும் இது இனக்கலவரமாக மாற்றம் பெறவும் அனுமதிக்கக் கூடாது எனவும் அரச இயந்திரங்களும், பொலிசாரும் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் களுத்துறை: சவூதி அரேபியாவில் இருந்து நேற்று திங்கட்கிழமை இரவு நாடு திரும்பிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இன்று செவ்வாய்க்கிழமை அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்ற இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் பார்வையிட்டதுடன் இவ்வாறான நாசகார செயல்களை செய்த பௌத்த தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

  • முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை – கிழக்கு மாகாண சபையில் இன்று முன்வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: 17-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபையில் முஸ்லி ம்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைக்கு எதிரான ஓர் கண்டனப் பிரேரணை நிறைவேற்றுதலின் ஊடாக அரசிற்கு அழுத்தத்தினை கொடுப்பது சம்மந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் ஓர் பிரேரணை திட்டமிட்டபடி முன்வைக்கபட்டு இருந்தது.

  • இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமைக்கு நவநீதம்பிள்ளை வருத்தம்

    – S-90 ஜெனீவா: இலங்கையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது சிங்களக் கு ழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து நவிபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • தர்ஹாநகருக்குச் சென்ற சிராஸ் மீராசாஹிபின் வாகனம் பேரினவாதிகளால் வழிமறிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் தர்ஹா நகர்: காடைத்தனமான இனவாத தாக்குதலுக்குள்ளான அலுத்கம,  தர்ஹா நகர் மக்களை பார்வையிடச் சென்ற கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பயனித்த வாகனத்தை இனவாதிகள் வழி மறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது பொலிசாரினால் குறித்த தாக்குதல் முறியடிப்புச் செய்யப்பட்டு மயிரிழையில் தப்பினார். 

←Previous Page
1 … 733 734 735 736 737 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar