-
அளுத்கமை கலவரம்: போலியான செய்தியால் மூக்குடைபட்ட சிங்கள ஊடகம்!
அளுத்கம: அண்மையில் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது அம்பேபிட்டிய பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அரசாங்க உதவியை எதிர்பார்த்து தனது கடைக்கு தானே தீமூட்டிக் கொண்டதாக சிங்களப் பத்திரிகையொன்று தனது முன்பக்கத்தில் ஒரு பொய்யான செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.
-
‘உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை அமெரிக்கா விரைவில் புரிந்துகொள்ளும்’- ஞானசார
கொழும்பு: அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுவதற்காக எனக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளமையானது பெரிய விடயமல்ல எனத் தெரிவித்த பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உண்மையான பயங்கராவாதிகள் யாரென்பதை அமெரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தேரர் தெரிவித்தார்.
-
உருகொடவத்த தாருள் உலூம் அரபிக் கல்லூரியின் புதிய கற்கை நெறிகள்
உருகொடவத்த: உருகொடவத்த தாருள் உலூம் அரபிக் கல்லூரியின் புதிய கற்கை நெறிகள் ஆரம்பமாகின்றன. கற்கைநெறிகள் பற்றிய விபரங்களுக்கு பின்வரும் விளம்பரத்தைப் பார்க்கவும்.
-
1990 குருக்கள்மடம் படுகொலை: ‘புதைகுழிகளில்’ அகழாய்வு ஒத்திவைப்பு
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளினால் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வுப் பணிகள் ஆகஸ்டு 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
நகரபிதா ஹில்மி ஏற்பாட்டில் இலவச ஆங்கில, சிங்கள வகுப்புக்கள் ஆரம்பம்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முயற்சியினால் மாணவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்த ஆங்கிலம், சிங்கள வகுப்புக்கள் கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதால் நகரசபை பிரிவுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைத்துக்
-
காத்தான்குடி ஜமாஅதே இஸ்லாமி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: (எஸ்.எப்.ஆர்.டி) இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் அனுசரனையில் காத்தான்குடி மஸ்ஜிதுல் மர்யம் பள்ளிவாயலில் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று 30-6-2014 நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
-
சவுதியில் மதிய நேரத்தில் பணியாளர்களை வேலைக்கமர்த்தியதால் 187 நிறுவனங்களுக்குத் தடை!
– MJ றியாத்: மத்திய கிழக்கில் தற்பொழுது நிலவும் அதி உஷ்ண காலநிலையையும், புனித ரமழானையும் கருத்திற்கொண்டு, வெளியில் வேலைசெய்யும் தொழிலாளர்களை மதிய நேரத்தில் வேலைக்கு அமர்த்தியதன் காரணமாக, குற்றச்சாட்டின் பேரில் 187 நிறுவனங்களுக்கு சவுதி அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது.
-
‘ரமழான் மாத இரவுகளில் குழப்பம் ஏற்படுத்த சில விஷமிகள் முயற்சி’ ஏ.எச்.எம். அஸ்வர்
கொழும்பு: ரமழான் மாத இரவுகளில் குழப்பங்களை ஏற்படுத்த சில விஷமிகள் முயல்வதால், இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டுமென தகவல், ஊடக அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் நேற்று பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனைக் கேட்டுள்ளார்.
-
இலங்கைக்கு கஞ்சா கடத்துவதில் தமிழக பொலிஸாருக்கும் தொடர்பு
கொழும்பு: இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா, மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதைப் பொருட்களை கடத்தி செல்லும் படகுகள் இந்திய கடலோர காவல் படையினர், இந்திய கடற்படை பொலிசார் மற்றும் சுங்கத் துறையினரின் பாதுகாப்பை மீறி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன.
-
இறுதிவரை போராடித் தோற்றது அல்ஜீரியா: பிரான்ஸ்-ஜேர்மனி காலிறுதிப்போட்டியில் மோதும்!
– MJ றியோ: சற்று முன்னர் இடம்பெற்ற ஜேர்மனி மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்றின் 6வது போட்டியில் ஜேர்மனி — எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று காலிறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கிறது.
-
‘அல் குர்ஆனும் நாமும்’ விஷேட பயான் (ஓடியோ)
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- அல் குர்ஆனும் நாமும் உரை-அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் (மதனி) இடம்-பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயல். காலம்.30-06-2014 –றமழான் இரவு நேர தொழுகையைத் தொடர்ந்து.
-
‘இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்’
லண்டன்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.