-
இத்தாலியில் பொதுபலசேனாவை விமர்சித்தமைக்காக விமல் வீரவன்ச தாக்கப்பட்டார்!
– SHM ரோம்: இத்தாலியில் பொது பலசேனாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச மீது அக்கட்சியினர் தாக்குல் நடத்தியுள்ளனர்.இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சரான விமல் வீரவன்ச இத்தாலி சென்றுள்ளார்.
-
பர்மாவில் மீண்டும் முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தாக்குதல்
பர்மா: மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு பள்ளிவாயலும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை பொலிசார் தடுத்தனர்.
-
ஜமாஅத் இஸ்லாமியின் இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத் இஸ்லாமி காத்தான்குடி பிரிவின் SFRD (Social For Rural Development) ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (றமழான் 3) இரண்டாவது நாளாகவும் காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள கடற்கரை பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
ட்விட்டரை வாங்க பேஸ்புக் முயற்சி..!
நியுயோர்க்: குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
-
அளுத்கமை, பேருவளை கலவரம்: ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலவரையறை முடிவு!
கொழும்பு: அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
-
இலங்கையில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது
கொழும்பு: இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. குறிப்பாக 22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
-
சவுதி கொடைவள்ளல்களால் ரமழானில் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்துக்கு அன்பளிப்பு!
– MJ மக்கா: புனித ரமழானை முன்னிட்டு, புனிய ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலுக்கு வரும் மக்களுக்காக, சவுதி அரேபியாவின் கொடைவள்ளல்களால் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.
-
பிஸ்மி குழுமத்தின் புதிய வளாக திறப்பு விழாவும், இப்தார் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி குழுமத்தின் தலைமையகம் மற்றும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை என்பவற்றின் புதிய வளாக திறப்பு விழாவும் ,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் 01-07-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி -6 பிரதான வீதி அலியால் ஹாஜியார் ஒழுங்கையிலுள்ள பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள 57 பள்ளிவாயல்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புத்த சாசன மத விவகார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் றமழான் மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள பள்ளிவாயல்களுக்கு
-
ஆர்ஜன்டீனா இறுதி நேர அசத்தல்: நுழைந்தது காலிறுதிக்கு!
– MJ சா போலோ: தற்பொழுது நிறைவடைந்த இரண்டாம் சுற்றின் 7வது போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இறுதிவரை மிக விறுவிறுப்பாகச் சென்ற போட்டியில், மேலதிக நேரத்தின் இரண்டாம் பகுதியில் ஆர்ஜன்டீனா வீரர் டீ மரியோ அடித்த அசத்தலான கோலில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
-
‘தான் ஒரு ஏமாற்று பேர்வழி, தாய்நாட்டுக்கும், விளையாட்டுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன்’ – லூவின்சென்ட்
– SHM வெலிங்டன்: சூதாட்ட புகாரில் சிக்கிய நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர், லூவின்சென்ட் தனது குற்றத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னிலையில் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
‘குற்றம் நிரூபனமானால் யாருக்கும் வழங்காத தண்டனையை கோத்தபாயவுக்கு அமெரிக்கா வழங்கும்’
– S-90 நியுயோர்க்: போர்க்குற்ற விவகாரங்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவருமான கோத்தபாய ராஜபக்சவை தண்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக அமெரிக்காவின் ‘தி டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: