-
பாசிக்குடா ஊடாக காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கான சொகுசு பஸ் சேவை ஆரம்பம்!
மட்டக்களப்பு: இலங்கை போக்குவரத்துச் சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது சொகுசு பஸ் வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு வழங்கும் நிகழ்வு வாழைச்சேனையில் நேற்று நடைபெற்றது.
-
‘பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த காலகட்டத்தில் மிக அவதானமாக செயற்படவேண்டும்’ – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘அல்லாஹ்வின் பேரருளால் புனித ரமலான் எங்களை வந்தடைந்ததுள்ளதாகவும் இந்த ரமலானை நாம் பூரணமாகவும் அவதானமாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த நாட்டில் ஓர் இனமுறுகல் ஏற்பட்டு இருக்கின்ற சந்தர்பத்தில் இந்த ரமலான் எங்களை வந்தடைந்து இருக்கிறது’ என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
றமழானின் சிறப்புக்கள் விஷேட பயான் நிகழ்ச்சி (ஓடியோ)
– ஒலிப்பதிவு:பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- றமழானின் சிறப்புக்கள் உரை-அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி) இடம்-பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயல். காலம்.28-04-2014 –றமழான் இரவு நேர தொழுகையைத் தொடர்ந்து.
-
றமழான் விஷேட அறிவியல் போட்டி-2014 – வெற்றி பெறுவபர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: றமழான் மாதத்தில் ஒவ்வொருவரும் குர் ஆனோடும் , நபி வழியோடும் தொடர்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக காத்தான்குடி அல்-மனார் நிறுவனம் 2014- றமழான் விஷேட அறிவியல் போட்டி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அல் -மனார் அறவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தெரிவித்தார்.
-
கொலம்பியா வெற்றி: காலிறுதி போட்டியில் பிரேசிலை சந்திக்கிறது
றியோ: சிறிய தென் அமெரிக்க நாடான கொலம்பியா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் கொலம்பியா, மற்றொரு சிறிய தென் அமெரிக்க நாடான உருகுவேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
-
‘சமூக வலைத்தளங்களினூடாக இன, மதங்களுக்கிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை’
கொழும்பு: சமூக வலைத்தளங்களினூடாக (Twitter, Facebook) இன, மதங்களுக்கிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ பாதுகாப்பு அதிகாரிகளை பணித்துள்ளார்.
-
நூலிடையில் தப்பியது பிரேசில்: சில்லி அதிர்ச்சித் தோல்வி!
– MJ றியோ: இரண்டாம் சுற்றின் முதலாவது போட்டி இன்று பிரேசில் மற்றும் சில்லி அணிகளுக்கிடையில் கோலாகளமாக இடம்பெற்றது. போட்டியின் 90 நிமிட முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்ததால், மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
-
யூ.எல்.எம்.என். மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சினால் 10 பேர் –சமாதான நீதவான்களாக நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 08 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் மற்றும் 2 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட
-
உலகம் முழுவதும் புனித ரமழான் ஆரம்பம்
கொழும்பு: கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மாலை நடைபெற்ற புனித ரமழான் மாதத்தை தீர்மானிப்பதற்கான மகாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலும், கிண்ணியா, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் தலைப்பிறை தென்பட்டதர்க்கான ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் நாளை முதல் நோன்பு என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுதி செய்துள்ளது.
-
‘தேசிய கைப்பணித்துறையின் வளர்ச்சிக்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்’ – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
– FM. பர்ஹான் கொழும்பு: தேசிய அருங்கலைகள் சார்ந்த கைப்பணி கைத்தொழிலாளர்களின் உற்பத்திகளை பரவலாக மக்கள் மயப்படுத்தி மக்களது வரவேற்புகளுக்கு உட்படுத்துதல் அவ் உற்பத்திகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சிறந்த சந்தைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் கைத்தொழில் கைப்பணியாளர்களை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வருடாந்த ரீதியில் கைப்பணி கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனைக் கூடங்கள் நடாத்தப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
‘புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்’- அ.இ.ஜ.உ
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஹிஜ்ரி 26.08.1435 கொழும்பு: ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவைக் கொண்ட மாதமே புனித ரமழான் மாதமாகும். இதில் அல்லாஹ் அல்-குர்ஆனை இறக்கிவைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.
-
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி இல 07, டெலிகொம் வீதியில் வசிக்கும் கலந்தர் லெவ்வை முஹம்மட் பஸீர் என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.