-
அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் 35 அடி நீள மலைப்பாம்பு!
அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியின் 60வது மைல் கல் பிரதேசத்தில் அமைந்துள்ள நீண்ட அடர் வனப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் குறுக்காக சுமார் 35 அடி நீளமான மலைப் பாம்பு படுத்துறங்கியதால் இவ்வீதியின் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் தடைப்பட்டது.
-
மதீனாவைக் காக்க மதீனா சிவில் அவசரப் படை தயார்!
– MJ மதீனா: தற்பொழுது வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் பதட்ட சூழ்நிலையைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில் அவசர பாதுகாப்பு நடடிவக்கைகளை சவுதி அரேபியா மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது முப்பதாயிரம் இராணுவத்தினர் சவுதி-ஈராக் எல்லையில் தயார் நிலையில் நிற்கின்றனர்.
-
‘றமழான் மாதம் எந்த நோக்கத்துக்காக எமக்கு அருளப்பட்டது’ விஷேட பயான் நிகழ்ச்சி (ஓடியோ)
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- ‘றமழான் மாதம் எந்த நோக்கத்துக்காக எமக்கு அருளப்பட்டது’ உரை-அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் (மதனி) இடம்- காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயல்.
-
‘அல்லாஹ்வுக்காக றமழானை முழுமையாக பயன்படுத்துவோம்’ விஷேட பயான் நிகழ்ச்சி (ஓடியோ)
– ஒலிப்பதிவு:பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- ‘அல்லாஹ்வுக்காக றமழானை முழுமையாக பயன்படுத்துவோம்’ உரை-அஷ்ஷெய்க் எம்.சி.எம்.அஸ்ஹர் (மின்ஹாஜி)
-
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 250 பேருக்கான விஷேட இப்தார் நிகழ்வு!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 03-07-2014 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
ஈராக் எல்லையில் 30,000 இராணுவ வீரர்களைக் குவித்துள்ளது சவுதி!
– SHM றியாத்: உள்நாட்டுப் போர் உச்சகட்டமாக நடைபெற்று வரும் ஈராக் நாட்டின் எல்லையில் சவூதி அரேபியா தமது 30 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்ததுள்ளது. ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சுன்னி முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது.
-
‘இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் ஆனால் மதம் மாறவில்லை’: ஜெய்
சென்னை: நான் இஸ்லாத்திற்கு மாறவில்லை. ஆனால் அந்த மார்க்கத்தை பின்பற்றுகிறேன் என்று நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுதுவிட்டு வந்த யுவன் ஷங்கர் ராஜாவுடன் தொப்பி அணிந்து நடிகர் ஜெய்யும் வெளியே வந்த புகைப்படங்கள் வெளியாகின.
-
கோல் போட்டுவிட்டு அழும் பிரேசில் வீரர்கள்: நிர்வாகம் அதிர்ச்சி!மனநல நிபுணர் ஆலோசனை!!
– SHM ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் கால்பந்து வீரர்கள் எதிரியை வீழ்த்தி வெற்றியை சுவைக்கும் போதும் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்களின் உணர்ச்சிவசப்பட்ட அழுகை ரசிகர்களிடையே அதிர்ச்சியையையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
-
செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத ஜப்பானிய அரசியல்வாதி – உலகைக் கவர்ந்த காணொளி
டோக்கியோ: செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அழுத ஜப்பானிய அரசியல்வாதி ஒருவரது வீடியோ உலகெங்கும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ர்யூட்டரோ நொனொமுரா என்னும் இந்த அரசியல்வாதியிடம், செய்தியாளர்கள் அவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பண ஊழல் குறித்துக் கேட்டபோதே இவர் இவ்வாறு அழுதுள்ளார்.
-
பத்து வருடங்களில் 87 மாதங்கள் கற்பமாக இருந்த அருமை தாய்!
– S-90 லண்டன்: இங்கிலாந்து பெண்ணொருவர் பத்தாண்டுகளில் 9 குழந்தைகளைப் பெற்று சூப்பர் மம்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்த ஜேசன் (41) என்பவரது மனைவி தோனியா (40). பிறந்தநாள் விழாவொன்றில் தோனியாவைப் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.
-
யாழில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் ஏன் பதிவு செய்யப்படுகின்றன?பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் கேள்வி
– PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப்பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
-
பொதுபலசேனா பொதுச் செயலர் சி.ஐ.டியினரால் விசாரணை
கொழும்பு: அளுத்கமவில் ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று சி. ஐ. டி யினரால் விசாரணை க்குட்படுத்தப்பட்டார்.