-
நான்காவது தடவையாக உலகச் சம்பியனானது ஜேர்மனி! ஆர்ஜன்டீனா பரிதாபத் தோல்வி!
– MJ றியோ: இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியின் இறுதிவேளையில் ஆர்ஜன்டீனாவை 1:0 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஜேர்மனி 4வது தடவையாக உலகச் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
-
அம்பாரை மாவட்ட ஊடகவியலார்களுக்கான இப்தார் நிகழ்வு
– JMF அம்பாரை: அம்பாரை மாவட்ட ஊடகவியலார்களுக்கான Just Media Foundation (JMF) இன் இப்தார் நிகழ்வு இன்று சாந்தமருது பரடேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. Just Media Foundation இன் வெளியிடுகளில் ஒன்றான எங்கள் தேசம் பத்திரிகையின் ஏற்பாட்டிலும் அம்பரை மாவட்ட ஊடகவியளார்கள் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் இந்த இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
-
இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரிக்கு உதவுங்கள்
சாய்ந்தமருது: இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரி ஒருவர் இரக்க உள்ளம் கொண்டவர்களிடம் உதவி கோரி நிற்கின்றார். சாய்ந்தமருது மாவடி வீதியை சேர்ந்த AM. ஜவாஹிறா எனும் பெண்ணுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக இரு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்து மிகவும் பேராபத்தான நிலையில் கண்டி மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
லிபியா விமான நிலையம் இஸ்லாமிய போராளிகளால் தாக்கப்பட்டது!
– MJ திரிபோலி: இன்று ஞாயிற்றுக்கிழமை லிப்யாவிலுள்ள இஸ்லாமிய போராளிகளால் லிப்யாவின் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி காலை 6 மணியிலிருந்து பலத்த ரொக்கட் தாக்குதல்களை விமான நிலையத்தின் மீது போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.
-
‘பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக இருந்துவருகின்ற விதிமுறையை மாற்றுவேன்’: பாப்பரசர்
வத்திக்கான்: கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
காஸாவுக்குள் தரைப்படை கமாண்டோக்களை அனுப்பியது இஸ்ரேல்
– SHM டெல் அவிவ்: வான் மூலமாக அட்டூழியத்தனமான தாக்குதலை தொடர்ந்து மேற்கொண்டு வந்த இஸ்ரேல் தற்போது தனது கமாண்டோப் படையினரை தரை மார்க்கமாக காஸா முனைப் பகுதிக்குள் ஊடுறுவ வைத்துள்ளது.இவர்கள் இஸ்ரேல் கடற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் ஆவர். காஸாவின் வடக்குப் பகுதி வழியாக இவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
-
பணியாட்களை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள முறுகலையடுத்து இலங்கையும் ஐ.அ.இராச்சியமும் பேச்சுவார்த்தை!
கொழும்பு: ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் அமைச்சர் மற்றும் குழுவினருடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் பணியாட்களை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்தே இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
‘பலஸ்தீனர்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுங்கள்’- இஸ்ரேல்
டெல் அவிவ்: காசாவின் வடக்கே வாழும் பலஸ்தீனர்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுங்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நன்பகலுக்குப் பின்னர் அப்பகுதியில் கூடுதலான வான் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தலாம் என்று தெரிகிறது.
-
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் ஊடகவியலாளர் கௌரவிப்பும்
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் ஊடகவியலாளர் கௌரவிப்பும 12.07.2014 சனிக்கிழமை திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-
PMGGயின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்வு
– PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆண்களுக்கான விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து இன்று பெண்களுக்கான நிகழ்வும் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைத்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையாக மக்கள் அரங்கில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
-
ஆர்ஜன்டீனா-ஜேர்மனி உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஓர் வரலாற்று அலசல்
– SHM றியோ: ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு பிடித்த பிரேசில் அணி தோல்வி அடைந்தது. இன்று 13ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.
-
சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் பலத்த பாதுகாப்பில்
– MJ றியாத்: வளைகுடா நாடுகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் இருந்து வருகின்றன. இங்கு விசேட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பதுடன், பிரயாணிகளும் அவர்களது உடமைகளும் துருவப்படுகின்றன.