Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐந்து பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

    ஏறாவூர் அபூ பயாஸ் கிரான்: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான், கோரகள்ளிமடு கொலனியில் 44 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான நாகமணி கிருஷ்ணபிள்ளை என்பவர் இன்று காலை தனது வீட்டின் முன் காணப்படும் மா மரக்கிளையில் கழுத்தில் துணியொன்றால் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

  • மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! ஆய்தியமலை – நெல்லூரில் சம்பவம்

    ஏறாவூர் அபூ பயாஸ் நெல்லூர்: மட்டக்களப்பு மாவட்ட ஆய்தியமலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட  நெல்லூர் எனும் கிராம வீதிகளுக்கு மின் இணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று மாலை மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இவர் பொலநறுவை மாவட்ட ஹிங்குராகொட, யுதகெனாவ பிரதேசத்தை சேர்ந்த மாரசிங்க முதியான்சலாகே விபுலரத்ன (வயது-22) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

  • ‘ஹமாஸூக்கு ஏவுகணை நவீன தொழிநுட்பத்தை நாமே வழங்கினோம்’ – ஈரான்

    – MJ தெஹ்ரான்: ‘காஸாவுக்காகப் போராடும் ஹமாஸ் இராணுவத்திற்கு, இஸ்ரேலைத் தாக்குவதற்காக நாங்கள்தான் ஏவுகணை நவீன தொழிநுட்பக் கருவிகளையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கினோம்’ என ஈரானின் சமயோசித பகுத்தறிதல் கவுன்ஸிலின் செயலாளர் மொஹ்ஸின் ரிசாயி குறிப்பிட்டுள்ளார்.

  • காஸா விவகாரம்: தனது பதவியை இராஜினாமாச் செய்த பிரித்தானிய பெண் அமைச்சர்!

    – MJ லண்டன்: காஸாவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை தனக்கு அதிருப்தியடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானிய வெளிநாட்டு அலுவலக அமைச்சர் பரோன்ஸ் வார்ஸி எனும் பெண் அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இன்று காலை இராஜினாமாச் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • காஸாவிலிருந்து ராணுவத்தை விலக்குவதாக இஸ்ரேல் அறிவிப்பு

    காஸா: காஸாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.காஸாவுக்கு வெளியில், ‘பாதுகாப்பு நிலை’களில் அந்தத் துருப்புகள் நிறுத்தப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  • 26 ஆவது இளைஞர் மாவட்ட சம்பியனாக அட்டாளைச்சேனை தெரிவு

    – ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 26 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

  • சுப்ஹானல்லாஹ்! காசாவில் ஷஹீதாகும் குழந்தைகள் ஐஸ்பழ குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்படும் பரிதாபம்!

    காஸா:  காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஷஹீதாகும் குழந்தைகளின் ஜனாஸாக்களை ஐஸ்பழம் வைக்கும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்கும் புகைப்படங்கள் காசாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • சமகால ஆங்கிலச் சொற்களை அறிவோம்

    தற்பொழுது காஸா விவகாரங்களை முன்னிட்டு ஆங்கில ஊடகங்களில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. negotiation – பேச்சுவார்த்தை truce – தற்காலிக யுத்த நிறுத்தம் ceasefire – யுத்த நிறுத்தம்

  • ‘தமது நாட்டின் பாதுகாப்பு எட்டப்படும்வரை காசா மீதான நடவடிக்கைகள் தொடரும்’- இஸ்ரேல்

    டெல் அவிவ்: காஸா மீது மீண்டும் முழு இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவிததுள்ளது. காஸா பகுதிகளில், ஏழு மணி நேரத்துக்கு மோதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நேரம் முடிவுக்கு வந்தபிறகு, முழுத் தாக்குதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.

  • ஐ.நாவின் முதுகெழும்பில்லா தன்மைக்கு ஈரான் கண்டனம்!

    – MJ தெஹ்ரான்: ‘காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனித நேயமற்ற தாக்குதலை நேரடியாகவே அவதானித்து, அருகிலிருந்து செயற்பட்டுவரும் காஸாவுக்கான ஐ.நா அமைப்பானது ஓர் முதுகெழும்பற்றது’ என ஈரானின் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கண்டித்திருக்கிறார்.

  • ‘மன நோயாளிகள் போன்று ஜாதிக ஹெல உறுமய அறிக்கை விடக்கூடாது’ – காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த மாதம் 31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அக்கட்சியின் தேசிய ஊடகச் செயலாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்திருந்த கருத்திற்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.

  • மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து உயர் கல்விக்காக உலமாக்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அல் ஜாமிஆ அல் இஸ்லாமியா மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து உயர் கல்விக்காக உலமாக்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் மற்றும் அல்மனார் நிறுவனங்களின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) கூறினார்.

←Previous Page
1 … 690 691 692 693 694 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar