-
ஏறாவூர் மத்தியஸ்தர் சபையினருக்கான செயலமர்வு
ஏ.சி.ஏ.அஸீஸ் ஏறாவூர்: ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மத்தியஸ்தர் சபையினருக்கான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
இஸிஸ் அமைப்புக்கு எதிராக அரபு லீக் ஒன்றிணைவு
– AF-90 கெய்ரோ: சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் இஸிஸ் இயக்கத்தினரை அடக்குவது என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இஸிஸ் அமைப்பின் திட்டமாகும்.
-
NFGGயின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக “நகர்வு” பத்திரிகை விநியோகம் ஆரம்பம்
– PMGG ஊடகப்பிரிவு பதுளை: எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தனது பிரச்சார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
-
‘இஸ்லாமிய தேச போராளிகளை முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்’ – சவுதி சிரேஷ்ட முஃப்தி
– MJ றியாத்: ‘இஸ்லாமிய தேசத்தின் போராளிகளான இஸிஸ் அமைப்பை உலக முஸ்லிம்கள் எதிர்க்கவேண்டும்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தியான அப்துல் அஸீஸ் அஷ் ஷெய்ஹ் வேண்டுகோளை விடுத்துள்ளோர்.
-
தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில் நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறை
– அல்-மனார் காத்தான்குடி: தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில் நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளதாக அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் தெரிவித்தார்.
-
குபா விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிறிக்கட் தொடரின் பரிசளிப்பு விழா
-டீன்பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தின் 10 வது ஆண்டு புா்த்தியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் (07.09.2014 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தினில் நடை பெற்றது. பிரதம அதிதியாக பொளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா MA/MP கலந்து கொண்டார்.
-
இஸிஸ் அமைப்பின் விரிவாக்கம்: ஆப்கான்-பாக்-இந்தியா…..
– AF-90 பக்தாத்: இஸிஸ் அமைப்பு தற்போது மேலும் பல நாடுகளில் தனது ஆட்சியை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இஸிஸ் அமைப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல இந்தியாவிலும், காஷ்மீரில் இஸிஸ் ஆதரவு குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. பல இந்திய இளைஞர்களும் இவ்வமைப்பில் சேர்ந்துள்ளமை கடந்த மாதம் உறுதியாகி இருந்தது.
-
‘திருமண பிணக்குகளை இணையத்தில் இடாதீர்கள்’ -சவுதி முஃப்தி
– MJ றியாத்: ‘திருமணம், மனிதர்களுக்கு அல்லாஹ்வால் ஆணையிடப்பட்ட விடயம். இஸ்லாத்தில் திருமணம் ஓர் முக்கிய பகுதி. எனவே கணவன்-மனைவிகளுக்கிடையில் எழும் இல்லற பிணக்குகளை இணையத்தில் இடவேண்டாம்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தி அப்துல் அஸீஸ் அஷ்-ஷெய்ஹ் சவுதி மக்களைக் கேட்டிருக்கின்றார்.
-
இலங்கையில் கைவிரல் அடையாளத்துடன்கூடிய புதிய கடவுச்சீட்டு
– SHM கொழும்பு: இலங்கை கடவுச்சீட்டுக்களில் கடவுச் சீட்டுக்குரியவரின் 10 கைவிரல் அடையாளங்களும் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு சட்டம் திருத்தப்படவுள்ளது.
-
தமிழ்/முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு…
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான தாஜூல் மில்லத் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.MA/MP அவர்களினால் கொக்கட்டிச்சோலை,பாலமுனை, காத்தான்குடியைச் சேர்ந்த ஒன்பது தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்விசார் சிற்றுாழியா் சேவைக்கான நிரந்தர நியமணம் வழங்கும் நிகழ்வு (06.09.2014 சனிக்கிழமை) பிரதியமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தினில் நடை பெற்றது.
-
‘மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாத வட மாகாண சபையை தயவு செய்து கலைத்து விடுங்கள்’
யாழ்: பலவிதமான எதிர்பார்ப்புக்களுடன் தமிழ்க் கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வடபகுதி மக்களுக்கு வட மாகாண சபை மூலமாக இதுவரை எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. மக்களுக்கான சேவை எதுவுமே இல்லாது ஒரு வருட காலம் வெறுமனே உருண்டோடி விட்டது.
-
சிரிய இராணுவத்திற்கும் இஸிஸ் அமைப்புக்குமிடையில் பலத்த சண்டை இடம்பெறுகிறது
– MJ பெண்காஸி: சிரியாவின் பெண்காஸி நகரில் இன்று இஸ்லாமிய தேசப் போராளிகளுக்கும் சிரியாவின் உள்ளுர் இராணுவத்திற்குமிடையில் ஏற்பட்ட சண்டையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.