-
மாற்றுகட்சிகளின் கொந்தராத்து காரர்களுக்கு முஸ்லிம்களின் ஒன்றினைவை பொருக்கமுடியாமல் இருக்கின்றது’
பதுளை: மாற்றுகட்சிகளின் கொந்தராத்து காரர்களுக்கு முஸ்லிம்களின் ஒன்றினைவை பொருக்கமுடியாமல் இருக்கின்றது. கடந்தகாலத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கான ஒடுக்குதலால் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றினைய வேண்டும் என்ற ஊவா மாகானத்தில் உள்ள உளமாக்கல் பெரியோர்கள் வேண்டுகோலின் பெயரில் எமது தலைமையும், எமது கட்சியும் விட்டுக்கொடுப்புக்களை செய்து ஒன்றுசேர்த்து முஸ்லிம்கள் ஒரு அணியில் தேர்தலில் குதித்திருக்கின்றார்கள்.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியத்தின் சூறா சபைக்கான ஒன்று கூடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறுமலர்ச்சி ஒன்றியத்தின் சூறா சபைக்கான ஒன்று கூடல் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸாவின் இல்லத்தில் நடைபெற்றது.
-
கட்டாரில் ‘உணரப்படாத தீமைகள்’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 11-09-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
சுவர் சரிந்ததில் ஐந்து தொழிலாளர் பலி: மக்காவில் சம்பவம்
– MJ மக்கா: புனித நகரமான மக்காவில் ‘ஜபல் கஃபா’ புரஜக்ட்டில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது குறித்த கட்டடத்தின் 15 மீற்றர் உயரமான சுவர் சரிந்து விழுந்ததில் குறைந்தது 5 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக மக்கா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
அமெரிக்காவால் மறக்க முடியாத செப்டம்பர் 11 – இன்றுடன் 13 வருட நிறைவு
நியுயோர்க்: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த் தியாகிறது. அமெரிக்கா மீதான இந்தத் தாக்குதலை விடவும் கடந்த நூற்றாண்டில் உலக வரலாற்றில் எத்தனையோ மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. என்றாலும் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கோபுர தாக்குதலைப் போன்று உலகமெங்கும் தாக்கத்தை செலுத்திய வேறு எந்த சம்பவமும் பதிவாக வில்லை.
-
9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு வீடொன்றில் சடலமாக மீட்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் 9 வயது சிறுமி அயலவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு பேக் ஒன்றால் கட்டி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
காத்தான்குடி மத்தியகல்லூரி-பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுயகற்றல் வகுப்பு
காத்தான்குடி: பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுயகற்றல் வகுப்பு காத்தான்குடி மத்தியகல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த.(சா/த) மாணவர்களுக்கான சுயகற்றல் வகுப்பின் ஆரம்ப நிகழ்வு 10.09.2014 இன்று கல்லூரி பரீட் மண்டபத்தில் ஜனாப்.எம்.எம். இஸ்மாயில் அசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?
– S-90 ஹொங்கொங்: 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் இலங்கை ராணுவத்தரப்பு தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
-
எந்நேரத்திலும் 1.46 மணி என்று பிழையான நேரத்தைக் காட்டும் ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரம்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஒட்டமாவடி: ஸ்பெய்ன் நாட்டு அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு –ஒட்டமாவடி பாலத்திற்கு அருகாமையில் வாழைச்சேனை தியாயவெட்டுவான் கொழும்பு பிரதான வீதியில் அல்-மஸ்ஜிதுல் ஹூசைனியா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள ஒட்டமாவடி மணிக்கூட்டுக் போபுரம் கடந்த பல மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் எந்த நேரத்திலும் 1.46 மணி நேரம் என்று பிழையாக நேரம் காட்டுவதாகவும் அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
‘சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம்’
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சிறு பிள்ளைகளுடன் பிச்சை எடுக்க பள்ளிவாயலுக்கு வருபவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு ஓட்டமாவடி மாவடிச்சேனை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் வாழைச்சேனை நன்னடத்தை,சிறுவர் பராமரிப்பு சேவைகள் காரியாலயம் எழுத்து மூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச ‘வெள்ளி’ விருதுக்கு தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பிரித்தானிய நாட்டின் ‘எடின்பர்க்’ பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச ‘வெள்ளி’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
இஸிஸ்: நடுங்கும் மேற்குலகும் அரபுலகமும்
– AF-90 பக்தாத்: ஒருகாலத்தில் அல் கொய்தா அமைப்பைத்தான் மிகக் கொடூரமான தீவிரவாத அமைப்பாக உலகம் பார்த்து வந்தது. ஆனால் அல் கொய்தாவை தூக்கிச் சாப்பிட்டு விட்டார்கள் இந்த இஸிஸ் அமைப்பினர்.