-
‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு
அல் மனார் காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் இம்முறை ஹஜ் செல்லவிருப்பவர்களின் நலன் கருதி ‘மக்கா அபிவிருத்தியில் ஹஜ் செயற்பாடு’ எனும் தொனிப்பொருளுடனான விளக்கச் செயற்பாடு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அல் மனார், அர்ராஷித் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.
-
ஊவாவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்
PMGG ஊடகப்பிரிவு பதுளை: எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மேற்படி பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதுமுக ஆசிரியர பயிலுனர்களின் வரவேற்பு நிகழ்வு
ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் தேசிய டிப்ளோமா (2014-2016) ஆம் கல்வியாண்டுக்கான புதுமுக ஆசிரியர பயிலுனர்களின் வரவேற்பு நிகழ்வு நேற்று (2014.09.02) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
சகல பொலிஸ் நிலையங்களையும் இணைக்கும் VPN வலையமைப்பு நேற்று முதல் ஆரம்பம்
கொழும்பு: இலங்கையிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணைக்கும் நவீன VPN (Virtual Private Network) வலையமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க ப்பட்டது. புதிய வலையமைப்பை பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து ஆரம்பித்து வைத்ததோடு வீடியோ தொலைபேசி அழைப்பினூடாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் உரையாற்றினார்.
-
‘ஆண்கள் உதவியின்றி பெண்களுடன்வரும் ஹஜ் விமானங்கள் திருப்பியனுப்பப்படும்’
ஜித்தா: புனித ஹஜ் கடமைக்காக சட்டபூர்வ ஆண் பாதுகாவலர் இன்றி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களை அழைத்துவரும் விமான சேவைகள் மீது சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இஸ்லாமிய ஹிலாபத்: அமெரிக்காவின் மற்றுமொரு ஊடகவியளாளரும் கொல்லப்பட்டார்!
– MJ பக்தாத்: அமெரிக்காவின் மற்றுமொரு ஊடகவியலாளரான ஸ்டீவன் சொட்லொப் என்பவரை இஸிஸ் அமைப்பினர் கொலை செய்யும் காட்சி அடங்கிய ஒளிநாடா உண்மையானது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பணயக்கைதியாக சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டாவது ஊடகவியலாளரும் தற்பொழுது கொல்லப்பட்டிருக்கிறார்.
-
துபாயின் இலங்கை பிரதித் தூதுவர், துபாய்க்கான குடிவரவு, குடியகழ்வு பிரதான அதிகாரியுடன் சந்திப்பு
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம்.எம் அப்துல் றஹீம், துபாய்க்கான குடிவரவு, குடியகழ்வு பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மட் அகம்மட் அல் மராய் அவர்களை சந்தித்து துபாயில் உள்ள இலங்கையர்களின் நலன் பேணல் மற்றும் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களின் குடியகழ்வு சம்பந்தமான விடையங்களைப்பற்றி கலந்துரையாடினார்.
-
இந்தியா சென்றுள்ள உசைன் போல்டின் தோற்றம்!
மும்பை: உலக வேக மனிதன் உசைன் போல்ட், இந்தியாவுக்கு சென்றிருக்கும் இவ்வேளையில், மைசூர் தலைப்பாகையுடன் இந்தியன் தோற்றத்தில் போஸ் கொடுப்பதை படத்தில் காணலாம்.
-
பாராளுமன்ற உறுப்பினர், மாகாண அமைச்சர், நகரபிதா கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கு வருகை
– ரைஸ் கிண்ணியா: தற்போது கிண்ணியாவினை அகில இலங்கைக்கே அழகாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் ஒன்றாக கிண்ணியா பொழுதுபோக்கு பூங்கா விளங்குகிறது. இப்பூங்காவினை பார்வையிடவென நாட்டின் பல பாகங்களிலிந்து பல்லின மக்களும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
-
‘இஸ்லாமிய ஹிலாபத்’திலிருந்து பாதுகாப்புப்பெற பிரான்ஸ் சென்றார் சவுதி இளவரசர்
– MJ றியாத்: வளைகுடா நாடுகளின் தலைமை நாடாக அமையும் சவுதி அரேபியா, தற்பொழுது தனது வலயத்தில் ஏற்பட்டிருக்கும் ‘இஸ்லாமிய ஹிலாபத்’ அச்சத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமான பேச்சுவார்த்தைக்கு தனது இளவரசரை பிரான்ஸூக்கு அனுப்பி இருக்கிறது.
-
நவீன ட்ரோனை கையாளும் இஸிஸ்
– SHM பக்தாத்: இஸிஸ் இயக்கம் தற்போது நவீன ரக ட்ரோன்களையும் பெற ஆரம்பித்திருப்பது உலக நாடுகளைக் கவலை கொள்ள செய்துள்ளது. தற்போது இஸிஸ் அமைப்பிடம் ஒரே ஒரு ட்ரோன் உள்ளது. ஆனால் அதில் ஏவுகணை எதுவும் பொருத்தப்படவில்லை. மாறாக கமராவைப் பொருத்தியுள்ளனர். இந்த ட்ரோன் , அமெரிக்கா பயன்படுத்தி வந்த ட்ரோன் ஆகும்.
-
ஈமெயிலுக்கு வயது 32!
– AF-90 நியூயோர்க்: ஈமெயில் 32 வயதைத் தொட்டுள்ளது. 10 வயது பையன் முதல் 100 வயது தாத்தா வரை இன்று ஈமெயிலில் புழங்காத மனிதர்களே இல்லை என்ற இந்த இன்றைய நிலையை 32 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய காரணகர்த்தா ஒரு இந்தியத் தமிழர் – வி.ஏ. சிவா அய்யாத்துரை.