-
வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன்னணியில் நின்று செயற்பட்ட இஸ்ரேலின் பிரபல மொசாட் உளவாளி ஹராரி மரணம்!
டெல் அவிவ்: இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் பிரபலமான உளவாளி மைக் ஹராரி தனது 87ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் வெளிநாடுகளில் இருக்கும் பலஸ்தீன போராளிகளை படுகொலை செய்வதில் முன்னணியில் நின்று செயற்பட்டவராவார்.
-
‘அரச முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண சபைகள் மூலம் சம்பளம்’- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
கொழும்பு: நாட்டில் இயங்கிவரும் அரசாங்க முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாகாணசபைகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவிக்கும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம்: ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள்!!
கொழும்பு: கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) உருவாக்கப்படுவதினூடாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் உருவாவதாக துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
-
மஞ்சள் கடவையால் நடந்து சென்ற வயோதிபர் விபத்தில் பலி – அம்பலத்தடியில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை, அம்பலத்தடி சந்தியில் இன்றுகாலை இடம் பெற்ற விபத்து சம்பவமொன்றில் எண்பத்தொரு வயதுடைய சின்னத் தம்பி சோமசேகரம் என்ற வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
-
09 வயதுச் சிறுமி சீமாவை சீரழித்த சமூக விரோதி ஐ.எம் ரமழானுக்கு இலங்கை அரசு மரண தண்டனை விதிக்க வேண்டும்
– NTJயின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை காத்தான்குடி: கடந்த 10.9.2014 (புதன்கிழமை) அன்று மாலை 7 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவு எல்லையிலுள்ள மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதியைச் சேர்ந்த பாத்திமா சீமா (வயது 09) எனும் சிறுமி ஐ.எம். ரமாழான் எனும் சமூக விரோதியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே!
-
சிறுவர் சிறுமிகள் மீதான வன்முறை தொடர்பில் விஷேடமாக ஆராய்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 164ஏ, 164பி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
இஸிஸ் கட்டுப்பாட்டிலுள்ள 3 இடங்களில் வான் தாக்குதல்கள்
– SHM டமஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள ரக்கா உள்ள 3 முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் 5 அரபு நாடுகள் கூட்டாக சராமரி வான் தாக்குதல்களை நடத்தின. இதில் 20 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. ஈராக்கிலும் சிரியாவிலும் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய இஸிஸ், அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்துள்ளனர்.
-
உலகில் உயரமான ஐந்து வயதுச் சிறுவன்!
– MJ டெல்லி: இந்தியாவின் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கரண் சிங் எனும் 5 வயதுச் சிறுவனின் உயரம் தற்பொழுது உலகைத் தொட்டிருக்கின்றது. ஆம். 5 அடி, 7 அங்குலம் உயரமுடைய கரண் சிங் எனும் சிறுவன் கடந்த 2008ம் ஆண்டு பிறந்தான்.
-
பாத்திமா சீமா கொலை: சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அண்மையில் மட்டக்களப்பு -மஞ்சந்தொடுவாய் பகுதியில் 9 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபருக்கு விளக்கமறியல் காலம் 14 நாள் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
-
சிரியாவில் இஸிஸ் மீது அமெரிக்கா மற்றும் அரபு கூட்டுநாடுகள் இணைந்து தாக்குதல்!
– AF- 90 வாஷிங்டன்: சிரியாவில் ஐ.எஸ். போராளிகளின் நிலைகள் மீது அமெரிக்கா, சவுதி, பக்ரைன், கத்தார் எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக வான் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ், இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனம் செய்துள்ளனர்.
-
ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?
கொழும்பு: ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014 தொழில் சந்தை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து படித்துவிட்டு தொழிலை எதிபார்த்துள்ள இளைஞர், யுவதிகளின் நன்மைகருதி இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014 தொழில் சந்தை 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.