Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 23-09-2014 இன்று திங்கட்கிழமை தொடக்கம் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்துவோம்’- மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

  • கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் வெளியானது

    – அபூஹக் திருகோணமலை: கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களின் 2015ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றப் பட்டியல் கிழக்கு மாகாண நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களினால் நேற்றைய தினம் (22.09.2014) வெளியிடப்பட்டுள்ளது.

  • குவைத்தில் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்

    – கலீல் பாகவீ

  • பால் மா விளம்பரங்களுக்கு உடன்தடை

    கொழும்பு: பால்மா தொடர்பான சகல விளம்பரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பால்மா தொடர்பான தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் வானொலி விளம்பரங்கள் இடைநிறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  • மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் யாழிற்கான புகையிரத சேவை பரீட்சார்த்தம்

    – FM. பர்ஹான் யாழ்ப்பாணம்: வடக்கின் அபிவிருத்தியின் மற்றுமொரு திட்டமாகவும் 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை முழுமைப்படுத்தும் வகையிலுமான பரீட்சார்த்த புகையிரத சேவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

  • ஊவா மாகாண தோல்வி அடுத்த வெற்றிக்கான அடித்தளம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாதவர்கள் இந்த பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்

    – கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: நடை பெற்று முடிந்துள்ள ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களும், புரிந்து கொள்ள முடியாத கட்சிக்குள் வெளியாகும் கருத்துக்களும் எந்த அளவுக்கு ஒற்றுமையின் பலத்தை காட்டப் போகின்றது என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.

  • மட்டு-மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆசிய மன்றத்தின் அனுசரனையில் ஆசிய மன்றத்தினால் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல் 22-09-2014 திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்துறுக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

  • பதுளை மாவட்ட முஸ்லிம்கள் தேர்தலில் நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ளதோடு அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படும் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார்கள்

    FM. பர்ஹான் & நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பதுளை: நேற்று வெளியான 2014 ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாரிய முன்னேற்றத்தையும் மக்கள் ஆதரவையும் கொடுத்திருக்கிறது. கடந்த மாகாணசபைத் தேர்தலைவிட இம்முறை 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஐ.தே.க பெற்றிருக்கிறது.

  • காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 420 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. பஸ் சேவை

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின் மேற்குப் பிராந்தியத்தின் கம்பஹா மாவட்டத்திலுள்ள வெலிசர  டிப்போவும் ஜா – எல டிப்போவும் இணைந்து காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பொலனறுவை ஊடாக காத்தான்குடிக்கும் இரவு நேரத்தில் விஷேட பஸ் சேவையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வெலிசர  டிப்போ முகாமையாளர் லக்ஷ்மன் மல்ராஜ் தெரிவித்தார்.

  • காத்தான்குடியிலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என கூறப்படும் வதந்தியை நம்பவேண்டாம் எனக் கூறி காத்தான்குடி பிரதேச மீனவர்கள் ஆர்பாட்டம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என வதந்தி பரவி வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வதந்தியை நம்பவேண்டாம் எனவும் கூறி காத்தான்குடி பிரதேச  மீனவர்கள் 22-09-2014 இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • புனாணை அணைக்கட்டு பொத்தானை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொர்பாக ஆராயும் விஷேட கூட்டம் – பொத்தானை கிராமத்தில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் புனாணை: மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறியுள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கான விஷேட கூட்டமொன்று அண்மையில் புனாணை அணைக்கட்டு பொத்தானை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் பொத்தானை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல தலைவர் அகமட் லெப்பை ஹாஜியார் தலைமையில்  இடம்பெற்றது.

←Previous Page
1 … 658 659 660 661 662 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar