-
புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை நடாத்திய 2014 பாலர் விளையாட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
கவிஞர் ரீ.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல். ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என் வானமும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 6வது வருடாந்த விளையாட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 6வது வருடாந்த விளையாட்டு விழா 31-10-2014 நேற்று வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எல்.ஏ. முஹைதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் பதுறியா ஹெபி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 23வது வருடாந்த விளையாட்டு போட்டி 31-10-2014 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி பதுறியா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பதுறியா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.அக்ரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
பெற்றோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு
காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பபாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினால் பெற்றோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய அவசர உலகில் வாழும் நாம் பிள்ளைகளை கல்வி கற்றலின்பால் எவ்வாறு ஊக்குவிப்பது என்பது தொடர்பான உலவியல் சார் கருத்துக்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
-
ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கத்தை பரிசாக அள்ளிக்கொடுக்கும் டுபாய் அரசு!
– AF- 90 டுபாய்: டுபாயில் ஒரு கிலோ எடை குறைத்தால் ஒரு கிராம் தங்க காசு வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அளவுக்கு அதிகமாக உடல் குண்டாகி அவதிக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் உடல் பருமனை குறைப்பவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு டுபாய் அரசு அறிமுகம் செய்தது. அதன்படி, ஒரு கிலோ எடையை குறைத்தால் 1 கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்படுகிறது.
-
குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பில் விஷேட செவ்வி- ஓடியோ
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பில் -கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், சட்டத்தரணி எம்.பி.முஹம்மட் பௌசான் ஆகியோர் வழங்கிய விஷேட செவ்வியை இங்கு கேட்கலாம்.
-
“குருக்கள்மடம் மனித புதைகுழியை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 திகதி தோண்டுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடிகின்றது” – சிப்லி பாரூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிக்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை தொடர்பான வழக்கு விசாரனை 30-10-2014 நேற்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
-
“மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுவோம்”
– ஹாசிப் யாஸீன் கல்முனை: பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு ‘நாம் இலங்கையர்கள்’ என்று இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தொழிநுட்ப உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ,பள்ளிவாயல்கள் உட்பட 10 அமைப்புக்களுக்கும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவுக்கும் தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின்- 2014 விருது வழங்கும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் -2014 விருது வழங்கும் விழா 30-10-2014 நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.