-
சிரியாவில் எரிவாயு கிணறுகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.
– AF- 90 டமஸ்கஸ்: சிரியாவின் மத்திய மாகாணமாகிய ஹோம்ஸில் மூன்று முக்கிய எரிவாயு கிணறுகளைக் நேற்று ஐ.எஸ். கைப்பற்றியுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ், இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை பிரகடனம் செய்துள்ளனர். தொடர்ந்தும் சிரியா, ஈராக்கின் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். இற்கு எதிராக போரிடும் சிரியா, ஈராக், குர்திஷ்தான் படைகளுக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் களத்தில் குதித்துள்ளன.
-
தாறுஸ்ஸலாம் கலாபீடத்தின் புதிய மாணவர் அணுமதி 2015
– எம்.ரீ.எம்.பாாிஸ்
-
“உலகக் கிண்ணம் 2022 – எப்ரல் மாதத்தில் நடாத்தப்பட வேண்டும்”
– MJ மியூனிக்: பீபா-2022 உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் வாய்ப்பு கட்டாருக்கு வழங்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் இவ்வுலகக்கிண்ணம் சர்ச்சையில்தான் இருந்து வருகின்றது. ஜூன், ஜூலை மாதங்களிலிலேயே பீபா உலகக் கிண்ணப்போட்டிகள் உலகில் இடம்பெற்று வருவது வழமை.
-
ரீ.எல்.ஜவ்பர்கான் எழுதிய “முறிந்த சிறகும் என் வானமும்” நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரி மண்டபத்தில்…
– டீன் பைரூஸ் காத்தான்குடி: சிரேஷ்ட ஊடகவியலாளரும்,தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற காத்தான்குடி கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் jp எழுதிய “ முறிந்த சிறகும் என் வானமும்” நூல் வெளியீட்டு விழா (31.10.2014 வெள்ளிக்கிழமை) பி.ப.04.00 மணிக்கு காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரி மண்டபத்தினில் மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா MA/MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
-
அமெரிக்க விமானத்திற்குள் அல்கைதா நெட்வேர்க்: அதிர்ச்சியில் பயணிகள்!
– AF- 90 வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் அல்கய்தா பெயரில் வை-பை நெட்வேர்க் இருப்பது தெரியவந்ததால் அந்த விமானமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டனுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராகியுள்ளது. அப்போது பயணி ஒருவர் தனது செல்போன் வை-பையை ஒன் செய்துள்ளார்.
-
முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடாத்தும் ஆளும் கட்சியினர்
கொழும்பு: எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
-
“பாரிய பிரச்சினையாக காணப்பட்ட குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான காலம் கணிந்துள்ளது”- தவிசாளர் அஸ்பர்
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படும் பாரிய பிரச்சினையாக காணப்பட்ட குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான காலம் கணிந்துள்ளதாக தவிசாளர் எஸ் எச் எம் அஸ்பர் தெரிவித்தார். நேற்று 28.10.2014 காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற பிரதேச ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க ஏவுகணை 6வது விநாடியில் வெடித்துச் சிதறியது!
– MJ வேர்ஜினியா: விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் அண்டாரிஸ் எனும் ரொக்கட், ஏவப்பட்ட 6வது வினாடியில் வானுக்கும் பூமிக்குமிடையில் வெடித்துச் சிதறியது. அமெரிக்காவின் வேர்ஜினியா விண்வெளி விஞ்ஞானத் தளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டிருந்த இந்த ஏவுகணையே வெற்றயளிக்காமல் சிதறி வெடித்துள்ளது.
-
“ஒருவர் ஒரு முறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும்” – ஜனாதிபதி
முள்ளிப்பொத்தானை: முஸ்லிம்கள் மக்கா யாத்திரையை மேற்கொள்வதற்கு முறையான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவதுடன் ஒருவர் ஒரு முறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். செல்வந்தர்களே பல தடவை மக்கா யாத்திரை செல்வதும் பணமில்லாதோருக்கு அது பகற்கனவாகி வாய்ப்புக்கள் தடுக்கப்படுவதும் தொடர்கிறது.
-
கல்முனை சாஹிபு வீதியின் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உத்தரவு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை சாஹிபு வீதியின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜீ.பிரேமசிறி மகநெகும நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இவ்வீதியின் அபிவிருத்திப் பணி தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் மூக்கை நுளைப்பது கவலையளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அல்-கிம்மா நிறுவன பணிப்பாளரினால் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
– எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: அல்- கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியினால் இன்று அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அல்-கிம்மா நிறுவனம் இன மத வேறுபாடின்றி, சமூக ஐக்கியத்தையும் நாட்டின் அபிவிருத்தியினையும் கருத்திற்கொண்டு, இலங்கையின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்துவருகின்றது.