காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பபாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி பிரிவினால் பெற்றோருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய அவசர உலகில் வாழும் நாம் பிள்ளைகளை கல்வி கற்றலின்பால் எவ்வாறு ஊக்குவிப்பது என்பது தொடர்பான உலவியல் சார் கருத்துக்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
இவ் கருத்தரங்கில் வளவாளராக சம்மாந்துரை பிரதேச செயலக உளவலத்துனை உத்தியோகத்தர் LTM. இயாஸ் (M.Phil Reading) கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேசசெயலாளர் அப்கர் தலைமை தாங்கியதுடன் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் MTM. அஸ்மி தாஜூதீனின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
Published by




Leave a comment