Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யாசகர் கை அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால் யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக் கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

  • ஒரே தடவையில் 5000 பேர் தாதியர் பயிற்சியில் இணைப்பு!

    கொழும்பு: மருத்துவ தாதி சேவைக்காக முதன்முறையாக ஒரே தடவையில் 5 ஆயிரம் பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தாதியர் பயிற்சிக்காக மேற்படி மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவம் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

  • அக்கரைப்பற்று மீனவரின் கரைவலையில் சிக்கிய ரூபா ஒன்றரைக் கோடி பெறுமதியான பாரை மீன்கள்!!

    அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று கடற்கரையில் மீனவர் ஒருவரின் கரைவலையில் 5000 கிலோவுக்கும் அதிகமான பாரை மீன்கள் நேற்று முன்தினம் பிடிபட்டன. இதன் பெறுமதி சந்தை விலையில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

  • ஹரீஸ் எம்.பியைப் பாராட்டும் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்!

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதக் கருத்துக்களை பெரும்பான்மை மக்களிடம் பரப்பிவரும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட இனவாதக் கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் தெளிவான விளக்கத்தினை மிகத் தைரியமாக கொடுத்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

  • கின்னியா நகர சபையில் தற்காலியமாக கடமை புரியும் ஊழியா்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் விஷேட கவனம்

    – எம்.ரீ.எம். பாரிஸ் கின்னியா: கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுகின்ற 600க்கு மேற்பட்ட உழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மேற்கொண்டுள்ளார்.

  • பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவும், T-shirt அறிமுகம் செய்வது தொடர்பான கலந்துரையாடல்

    – எம்.எம்.ஜபீர் சம்மாந்துறை: சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை கமு/சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவும், T-Shirt அறிமுகம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் (2014.11.16) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுத்தீன் தலைமையில் நடைபெற்றவுள்ளது.

  • காத்தான்குடியில் எழுந்துள்ள ஷியா பிரிவும் அதன் கொள்கைகளும்

    காத்தான்குடி: காத்தான்குடி சலாக்கா பிளேசில் நடைபெற்ற ஷீயாக்களின் ஒன்று கூடல் தொடர்பாக “ஷீயாக்கள் என்போர் யார்” எனும் தலைப்பில் ஷீயாக்களின் தோற்றம் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக  காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதம பிரச்சாரகர் மௌலவி எம்.சீ.எம்.ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களினால் மார்க்க சொற் பொழிவு  ஒன்று இடம் பெற்றதன் எதிரொலியாக காத்தான்குடி சம்மேளனத்திற்கு இரண்டு தௌஹீத் சகோதரா்களினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக அறிய முடிகின்றது.

  • அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற்ற கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வீரர்கள் கௌரவிப்பு

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற்ற கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்றது.

  • அப்துல்லாஹ் பக்தாதி கொல்லப்பட்டாரா…?

    – MJ  மொசூல்: ஐ.எஸ். இஸில் மற்றும் இஸிஸ் ஆகிய பெயர்களையுடைய சிரியா-ஈராக் இணைந்த இஸ்லாமிய தேசத்தின் தலைவரான (ஹலீபா) அப்துல்லாஹ் பக்தாதி, தற்பொழுது அமெரிக்க கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என ஊர்ஜிதமற்ற செய்தி கசிந்து வருகிறது.

  • ரிதிதென்ன புகையிரத தரிப்பிடம் பொது மக்களுக்கு சேவை வழங்காமல் கவனிப்பாற்ற நிலையில் – மக்கள் விசனம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன எல்லை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ரிதிதென்ன புகையிரத தரிப்பிடம்  பொது மக்களுக்கு சேவை வழங்காமல் கவனிப்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • சீருடை அறிமுக உதைபந்தாட்ட நிகழ்வு

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னணி உதைபந்தாட்ட அணியான ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வை முன்னிட்டு இன்று மாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்துக்கும்இ வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான சினேக பூர்வ உதைப்பந்தாட்ட நிகழ்வு இடம் பெற்றது.

  • கல்முனை மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களில் சுற்றிவளைத்து தேடுதல்!

    ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் பொது மக்களுக்கு சிறந்த முறையில் சுத்தமானதும் சுகாதாரமான உணவுகளை வழங்கும் நோக்கில் கல்முனை பிரதேசத்திலுள்ள உணவகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு நேற்று (08) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

←Previous Page
1 … 623 624 625 626 627 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar