-
வெளிநாட்டினரை மணக்கவிரும்பும் சவுதி இளம் பெண்கள்!
– MJ ஜித்தா: சவுதி அரேபியா பெண்கள் உள்ளுர் பிரஜைகளைவிட வெளிநாட்டுப் பிரஜைகளை திருமணம் செய்துகொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டிவருவது அதிகரித்திருக்கின்றது. சவுதி ஆண்களைத் திருமணம் செய்து வாழ்வதில் இறுக்கமான பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும், இதன் காரணமாக அதிகளவான விவாகரத்துக்களையும் எதிர்நோக்க வேண்டிய சிக்கல்களும் இருப்பதாக சவுதிப்பெண்கள் தெரிவிக்கின்றனர்.
-
“இந்நாட்டிற்கு அவசியப்படுவது ஆட்சி மாற்றமா அல்லது ஆட்சி முறை மாற்றமா?: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி: அடுத்த பல வருடங்களுக்கு நம் நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடியதாக அமையவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம், இத்தருணத்தில் தேவைப்படுவது ஆட்சி மாற்றமா? அல்லது ஆட்சி முறையில் மாற்றமா? என நாம் சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
வெளிச்சத்திற்கு வரப்போகும் காத்தான்குடி ஷீயா ஏஜென்டுகளின் முகங்கள்
– AK-48 காத்தான்குடி: கடந்த காலங்களில் பிரச்சாரங்களினாலும்,மாற்று நடவடிக்கைகளினாலும் அடித்து ஒழிக்கப்பட்டு வந்த ஷீயாக்களின் செயற்பாடுகள் மீண்டும் காத்தான்குடியில் தலை துாக்கி இருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் மாத்திரம் இன்றி இவர்களின் ஆதிக்கத்தை எதிர்காலத்தில் அடியோடு இல்லாதொழிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் ஒட்டு மொத்த காத்தான்குடி சமூகமும் ஒன்று சோ்ந்து ஓர் செயல்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்பதே இன்று பலரின் எதிப்பாா்ப்பாகும்.
-
பின்லேடனை சுட்ட அமெரிக்க சீல்படை வீரர் இவர்தான்
லண்டன்: அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் வீரர் ரொப் ஓனைல் முதல்முறையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2011, மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து பின்லேடனின் தலை மீது மூன்று முறை சுட்டு 38 வயது ரொப் ஓனைல் அவரை கொன்றிருந்தார். இந்த தாக்குதலை நடத்தியவரின் விபரம் குறித்த இரகசியம் பேணப்பட்டு வந்தபோதும் ஒனைல் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி இம்மாத இறுதியில் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்க…
-
சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெறும் அ.இ.ம.கா வும் அதன் தலைமையும்
– ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கட்சி கால்பதித்துள்ளது. இலங்கையில் – பொதுவாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும் குறிப்பாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் கட்சியும் கடசியின் தேசியத் தலைமையான அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பெற்று வரும் நல்ல அபிப்ராயத்தை அடுத்தே சர்வதேச ரீதியாக வாழும் இலங்கையர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து…
-
நீலவானின் நீந்தும் நிலா
கவிஞர் இல்மி அஹமட் லெவ்வை இலங்குகின்ற இலக்கிய வானின்- தங்க நிலா தம்பிலெவ்வை தந்த ஜவ்பர்கான்!
-
துபாயில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் இலங்கை குழு பங்கேற்ப்பு
ACM. சப்றி துபாய்: 10 வது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு துபாயில் அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் துபாயின் ஆட்சியாளருமான சேக் முகம்மட் பின் றசீட் அல் மக்தூம் தலைமையில் தொடங்கிய இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பொருளாதார வல்லுணர்கள் கலந்து கொண்டனர் .
-
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
ஹாசிப் யாஸீன் கல்முனை: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் நுழைவாயில் கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் ஷீயாக்களின் ஆதிக்கம் அதிகரிப்பு!
– AK-48 காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை சலாக்கா பிளேஸ் இல் ஷீயாக்களின் ஒன்று கூடல் ஒன்று (05.11.2014 புதன்கிழமை) இரவு ரகசியமாக இடம் பெற்றுள்ளதாக தவகல் ஒன்று கசிந்துள்ளது. இந்த ஒன்று கூடலுக்கான அனுமதியை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் பதவி வழியில் இருந்து கொண்டு கூடுதல் அதிகாரம் செலுத்தும் ஓர் ஹாஜியார்தான் வழங்கியதாக வெளியில் பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.
-
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஆஷூறா நோன்பு திறக்கும் நிகழ்வு
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் (உஐப)மனிதாபிமான சேவைகள் மற்றும் சகவாழ்வுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஹிஐ;ரி 1436 முஹர்ரம் 10ம் நாள் ஆஷூறா நோன்பு திறக்கும் நிகழ்வு உபை பள்ளிவாயலில் நேற்று இடம்பெற்றது.
-
சவுதி ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி! 9 பேர் காயம்!!
– MJ றியாத்: சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசமும், ஷியா பிரிவினரின் தனிப்பிரதேசமாகவும் கருதப்படும், அல் அஹ்ஸா நிர்வாக எல்லைக்குள் உட்படும் அல் தல்வா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் பிஸ்டோல் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை உபயோகித்திருந்ததாக சவுதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.