-
இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்ன பஸ் டிப்போவுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை கிராமமான ரிதிதென்ன கிராமத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 08-11-2014 நேற்று சனிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்ன பஸ் டிப்போவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
-
ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் ரிதிதென்ன அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலில் பகுதி நேர ஹிப்ழ் மத்ரசா ஆரம்பித்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லை கிராமமான ரிதிதென்ன கிராமத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் முதலாவது (ஹிப்ழ்) அல் குர்ஆன் மனன பிரிவுக்கான மத்ரசா ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ரிதிதென்னை மற்றும் ஜயந்தியாய ஆகிய கிராமங்களை உள்ளடக்கும் வகையில் மட்டக்களப்பு – கொழுப்பு ரிதிதென்னை பிரதான வீதியில் அமைந்துள்ள அபூ பக்கர் சித்தீக் ஜூம்மா பள்ளிவாயலில் இவ் ஹிப்ழ் மத்ரசா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
அம்பாரை கரையோர மாவட்டக் கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கியதல்ல.
(ஹாசிப் யாஸீன்) அம்பாரை;அம்பாரை கரையோர மாவட்டக் கோரிக்கை முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கியதல்ல. மொரகொட ஆணைக்குழுவின் சிபாரிசாகும். இதனை இனவாதக் கோரிக்கை என தென்னிலங்கை மக்களிடம் பிரச்சாரம் செய்துவரும் நாட்டின் பிரதமர், அமைச்சர் ஜோன் செனவிரட்ன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களையிட்டு கவலையடைகின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு மட்டக்களப்பில்..
-எம்.எச்.எம்.அன்வர்- மட்டக்களப்பு;எதிர்வரும் 19 ம் திகதிக்கு முன்னர் திவிநெகும பயனாளிகள் அனைவருக்கும் ரூ.2500ஃ- வீடு திருத்தம் செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான எம்.எல்.ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்,
-
கட்டார் கிளையின் வாழ்த்துச் செய்தி!
– இர்ஷாட் ரஹ்மதுல்லா
-
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என தீர்மானம்”
– ஹாசிப் யாஸீன் அம்பாறை: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என அம்பாறை மாவட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
-
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தொழுகைப் பயிற்சி முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ஒன்றை 06-11-2014 வியாழக்கிழமை பாலமுனை கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொழிநுட்ப உபகரணங்கள் உட்பட விளையாட்டு உபகரணங்கள், தளபாடங்கள் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியில் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் , பள்ளிவாயல்கள் , பாடசாலைகள் உட்பட 19 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
ஹரீஸ் எம்.பியின் முயற்சியினால் கல்முனை அல்-பஹ்ரியா பாடசாலை மாணவி விடுவிப்பு!
ஹாசிப் யாஸீன் கல்முனை: சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது புராதன சின்னங்களில் மையினால் எழுதியதற்காக கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் விடுவிடுக்கப்பட்ட சம்பவபம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
-
றிதா சர்வதேச பாடசாலையின் 3வது பட்டமளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: றிதா சர்வதேச பாடசாலையின் 3வது பட்டமளிப்பு விழா 07-11-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. றிதா சர்வதேச பாடசாலையின் செயலாளர் எம்.ஏ.எம்.சுல்மி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
-
காத்தான்குடியில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வுகள்..
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 24 இலட்சத்து 40 நாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வாழ்வாதார அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 78 திவி நெகும பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், காத்தான்குடி ஸாவியா
-
கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் காரியாலயமும் பொது நூலகமும் திறந்து வைப்பு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் காரியாலயமும்; பொது நூலகமும் திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் சந்தைக் கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்றது. இஸ்லாமிய சமூக சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.