-
அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரவேற்பு நிகழ்வு
அட்டாளைச்சேனையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா அட்டாளைச்சேனை: ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை தூக்கி எறிந்துவிட்டு சமூகத்தின் பாதுகாப்பு கருதி 71 உறுப்பினர்களுடன் வெளிவந்த முதலாவது கட்சி என்ற வகையில்,
-
காத்தான்குடி நகரசபையின் நிதி மோசடி தொடர்பில் NFGGயினால் பொலிசில் முறைப்பாடு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் நிதி நிர்வாக மோசடி தொடர்பிலான முறைப்பாடு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று மட்டக்களப்பு பொலிசில் பதிவு செய்துள்ளது. காத்தான்குடி நகரசபையில் எதிர்கட்சி உறுப்பினராகக் கடமையாற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதி SH.பிர்தௌஸ் அவர்களால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
பட்ஜட் நிவாரணங்களை தடுப்போர் மீது நடவடிக்கை
கொழும்பு: வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் நேரடியாக மக்களை சென்றடைவதற்குத் தடையாகவுள்ள காரணிகளைக் கண்டறிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புடன் சந்தையில் பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றனவா?
-
தரம் 05 புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகள்
கொழும்பு: தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் நேற்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட் டுள்ளன. இதன்படி, தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
-
கட்டார் விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி
டோஹா: கட்டாரின் டோஹாவில் இடம் பெற்ற விபத்தொன்றில் அமென்ட்ரா டி குவே எனும் இலங்கை விமானப் பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒரு விமானப் பணிப் பெண்ணும் இரு ஆண்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிக்கவிருந்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் பணிப் பெண்களே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத் துள்ளனர்.
-
“கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரை 48 மணித்தியாலத்தில் மு.கா. நியமிக்கும்”
கொழும்பு: இன்னும் 48 மணித்தியாலங் களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும். இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார், என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் விஸ்தரிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மிக நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்த பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வீதியின் வேலைகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 31-01-2015 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி- 05 ஊர் வீதி சின்னப்பள்ளிவாயல் அருகாமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி நகர சபையில் செலுத்தப்பட்ட சோலை வரிப்பணத்திற்கு பின் திகதியிட்டு பற்றுச் சீட்டுக்கள் வழங்குவது மோசடியாகாதா?
புவி. எம். ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையினால் 2015ம் ஆண்டிற்கான சோலை வரி அறவிடும் நடவடிக்கைகள் தொடர்பாக காத்தன்குடியிலுள்ள சகல பள்ளிவாசல்களினதும் ஒலிபெருக்கிகள் வாயிலாக இம்மாத ஆரம்பத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
-
கிழக்கு மாகாணத்தில் பின்தள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னுரிமையளித்து செயற்படும்
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஒலுவில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பின்தள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னுரிமையளித்து செயற்படும் என கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
-
ராஜபக்ச குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவு!
கொழும்பு: ராஜபக்ச குடும்பத்தினரினதும் அரசியல்வாதிகளினதும் ஊழல் தொடர்பிலான முறைப்பாடுகள் 2000 பதிவாகியுள்ளதுடன், 30 முறைப்பாடுகளே இலங்கை ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
-
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
டெல்லி: நீண்டதூரம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. அணுகுண்டை ஏந்தி ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்தவகை ஏவுகணை மூன்றாவது முறையாக இன்று சோதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதன்முறையாக சாலையில் செல்லும் கனரக வாகனத்தில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
-
ஸைபர் உலகில் சின்னாபின்னமாகும் அழகிய ஆன்மீக பண்பாட்டு பாரம்பரியங்கள்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் “(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.” (ஸுரதுல் லுக்மான் 31:16)