-
கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் கட்டிடங்கள் அமைக்க அனுமதி இல்லை
கொழும்பு: கடற்கரைகளுக்கு அருகாமையில் வானுயர்ந்த ஹோட்டல்கள் நிர்மாணிக்க இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலி பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் காலி மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காலி உலுவிடிகே ஐ. தே. க. பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.
-
சிகிரியா சுவரோவியத்தில் பெயரை எழுதிய மட்டு யுவதி கைது!
தம்புள்ளை: இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியா (அல்லது சீகிரிய) சுவரோவியம் மீது பெயரை எழுதியதாக கூறப்படும் தமிழ் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
மு.கா தலைவரால் மறக்கப்பட்ட கல்முனைக்கு அடுத்த தேர்தலிலாவது அரசியல் அதிகாரம் கிடைக்குமா?
எஸ்.ரீ.எம்.குதைப் கல்முனை: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய 89.91 வீதமான வாக்குகளை வாரி வழங்கிய கல்முனைத் தொகுதிக்கு ஒரு அரசியல் அதிகாரம் வழங்கப்படாமை குறித்து கவலையடைந்துள்ளோம். இந்தப் புறக்கணிப்பு கல்முனை வாக்காளர்களையும் கட்சியின் போராளிகளையும் சோர்வடையச் செய்துள்ளது. தோ்தலில் அதிக ஆர்வத்தோடு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கத்தாரில் கண்டணம்
AHAMED DEEDAT தோஹா: ஐக்கிய அமெரிக்காவில் கொல்லப்பட்ட மூன்று முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குகண்டணம் தெரிவிப்பதற்காக கத்தார் இல் Qatar Foundation ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில்பெரும்திரலான சகோதரர்கள் கலந்து கொண்டதை காணலாம்.
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை பிஸ்மி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சரீப் புறக்டர் லேனில் சுமார் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அல் மதரஸதுர் றஹ்மாணியாஹ் குர்ஆன் மத்ரசாவில் அல் குர்ஆனை ஓதி முடித்து காத்தான்குடி குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழிநுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் 3 மாத கால ஆங்கில மற்றும் தொழிநுட்ப பாடநெறியினை பூர்த்தி செய்த 63 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
புதிய அரசின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து முஸ்லிம் அரசியல் தலைமைகள் போதிய கவனம் செலுத்த வேண்டும்
– கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் யாப்பில் மிகவும் முக்கியமான மாற்றங்கள் இடம் பெறவுள்ளன, குறிப்பாக ஜனாதிபதிக்க் உள்ள நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தி தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து அரசின் தலைவராக பிரதமரும் இருக்கின்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
-
இந்தியா பாகிஸ்தான் மோதும் உலகக் கிண்ண “சூறாவளி” போட்டி: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது
அடிலைட்: உலக கிரிக்கட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த உலகக் கிண்ணத்தின் 2015 வரலாற்று புகழ்பெற்ற இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
-
போக்குவரத்து பிரதியமைச்சரின் மக்கள் சந்திப்பு
பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருகோணமலை ஜமாலியா பிரதேச மக்களுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று 13.02.2015 வெள்ளிக் கிழமை மாலை ஜமாலியா விளையாட்டுக் கழக கட்டடத்தில் இடம் பெற்றது.
-
இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க சனிக்கிழமை (14/02/1015) மட்டக்களப்பிலுள்ள இலங்கை விமானப் படையின் உள்ளுர் விமான நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
-
ஏறாவூர் மண் பதவிகளால் நிறைந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப் படாமலே இருக்கிறது: பிரதி தவிசாளர் சுபைர்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கிழக்குமாகாணசபை பிரதி தவிசாளர் கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்களின் ஏற்பாட்டில் ஏறாவூரிலுள்ள 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நேற்றயதினம் (13) ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.