-
குடும்பச் சட்டம் தெரிந்திருந்தால், குழப்பம் வரும் போது விளக்கம் கொடுக்கலாம்: மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
அப்துல் அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: எமது நாட்டில் குடும்ப உறவுகள் பல்வேறு சட்டங்களினால் ஆளப்படுகின்றன. இலங்கையில் முஸ்லிம் சட்டமானது பெரும்பாலும் பன்மைத்துவ சமூக கட்டமைப்பில் வரலாற்றுக் காரணிகளின் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் அம்சங்கள் சிறிய மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்ற தனியார் சட்டப்பரப்பாகும். இச்சட்டத்தினை தெரிந்திருந்தால் குடும்பத்தில் குழப்பம் வரும் போது விளக்கம் கொடுக்கலாம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
-
நுரைச்சோலை 500 வீடுகளும் மறைந்த மன்னர் அப்துல்லாஹ்வின் ஸதக்கத்துல் ஜாரியா: உரிய எழைகளுக்கு பெற்றுக் கொடுங்கள்
மசூர் மௌலானா அக்கரைப்பற்று: சுனாமியால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டில் அல்லல்படும் எமது உறவுகளுக்கென மறைந்த சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்கள் ‘ஸதக்கத்துல் ஜாரியா’ எனும் அடிப்படையில் நன்கொடை வழங்கிய அக்கரைப்பற்று நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் இந்த நல்லாட்சியிலாவது குறித்த பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
-
மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் தொடர்பில் காத்தான்குடி சம்மேளனத்துடன் வெளிநாட்டு மாணவர்கள் கலந்துரையாடல்
– டீன்பைரூஸ் காத்தான்குடி: இலங்கையிலிருக்கும் மதங்களுக்கிடையிலான பண்மைத்துவம் சம்மந்தமாக அறிந்து கொள்ளும் பொருட்டு இன்று காலை காத்தான்குடி சம்மேளனத்திற்கு சர்வதேச மாணவர்கள் விஜயம் செய்தார்கள். எட்டு நாடுகளைச் சேர்ந்த பதினாறு மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு சம்மேளன ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
-
வரலாற்று சிறப்புமிக்க காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் காரியாலயம் திறப்பு
-டீன்பைரோஸ் காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்திற்கான புதிய காரியாலயம் காத்தான்குடி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாத்திற்கு பின்னால் உள்ள நகர சபை கட்டிடத்தில் (13.02.2015 வெள்ளிக்கிழமை) உத்திய புர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னால் பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.
-
“அரசியலுக்குள் வருவதை விருப்பமில்லாமல் மறுத்தவன்தான் நான்”: ஷிப்லி பாரூக்
– டீன் பைரோஸ் காத்தான்குடி: கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தோர்தல் எவ்விதமான அரசியல் பின்புலமும் இல்லாத என்னை முன்னால் பிரதி அமைச்சர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் சார்பாக போட்டியிடுமாறு கூறிய போது முதலில் விருப்பமின்மையினால் மறுத்த போதும் பலரது வேண்டுகோளின் பேரில் பல தரப்பட்ட நியாயமான மற்றும் சமுக சிந்தனையுடனான
-
ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா 13-02-2015 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
உலகக் கிண்ண முதலாவது நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி: பந்து வீச தீர்மானம்
கிறைஸ்சேர்ச்: 2015 உலகக் கிண்ணத்தின் முதலாவது போட்டி நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெறுகிறது. முதலாவது போட்டியில் நியுசிலாந்தைச் சந்திக்கிறது இலங்கை அணி.
-
இரகசியப் பொலிஸார் கோட்டாவிடம் விசாரணை: சில கேள்விகளுக்கு கால அவகாசம் கோரியதாக தகவல்
கொழும்பு: ‘எவன்காட்’ ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் இரகசியமாக இயங்கி வந்த ஆயுதக் களஞ்சியம் ஆகியவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்.
-
“ஒரு பாடசாலையின் அபிவிருத்திற்கு பெற்றோர் சமூகத்தின் பங்களிப்பு கிடைப்பதென்பது மாபெரும் அருட்கொடையாகும்
– டீன் பைரோஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியால பாடசாலை மாணவர்களின் , பெற்றோர்களின் முழுமையான பங்களிப்புடன் சுமார் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான மேசைகள்,கதிரைகள் பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு (13.02.2014 வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணியழவில் பாடசாலை வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.
-
வளர்ந்து வரும் தேசப் பற்றும் இருட்டடிப்பு செய்யப்பட்ட சோனக பங்களிப்புகளும்
டாக்டர் I.L.M. றிபாஸ் கொழும்பு: நல்லாட்சி நோக்கிய ஒரு பயணத்தில் பல சவால்களைத் தாண்டி இலங்கை தேசத்தின் மக்களில் பெரும் பன்னமையானோர் ஒரு மாற்றத்திற்காக ஒன்றினைந்து உழைத்தனர். அந்த உழைப்பின் பிரதிபலனை அனுபவிக்கும் காலம் மலர்ந்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர். அதற்காக கொஞ்சம் பொறுமையுடன் காத்திருப்பதற்கும் பெரும்பாலான மக்கள் தம்மை தயார்ப் படுத்தி இருக்கின்றனர்.
-
ஜப்பான் நாட்டு தூதுவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இன்று தெரிவித்தார்.
-
உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா!
– AF-90 அடிலெய்ட்: உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் இல்லாத இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டிகள் அத்தனையும் இந்தியா வெற்றி பெற சச்சின் முதுகெலும்பாக இருந்த நிலையில், அவரது இடத்தை ஈடுகட்டும் வீரர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.