Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்குடாவின் புதுமுக வேட்பாளர் என பேசப்பட்டு வரும் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியால் சிங்கப்பூர் பயணமாகின்றார்

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: அன்மைக்காலமாக கல்குடா பிரதேசத்தில் புதிய அரசியல் மாற்றத்தினை மையமாக வைத்து புதுமுகங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கப்படவுள்ளதாக பேசப்படுபவர்களில் மிக முக்கியமான ஒருவராக பேசப்படும் பட்டயக் கணக்கறிஞர் எச்.எம்.எம். றியால் உலக தானிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் பயணமாகவுள்ளார்.

  • கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப்பட்டிப் போராட்டம்

    முஹம்மது சப்றாஸ் வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று 18.02.2015 பிற்பகல் இருவேறு தரப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக கறுப்புப் பட்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப் பிரசுரங்களையும்  விநியோகித்தனர்.  

  • ஏறாவூரில் மௌலானாவுக்கு மகத்தான வரவேற்பு

    எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடந்த 6ம் திகதி சத்தியப்பிரமானம் செய்து கொண்ட அலி ஸாஹிர் மௌலானா தனது சொந்த ஊரான ஏறாவூறுக்கு நேற்று (17.02.2015) வருகை தந்த போது கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஏறாவூர் பொது மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

  • செங்கலடி கறுத்தப் பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம்!

    ஏறாவூர் அபூ பயாஸ் செங்கலடி: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி, செங்கலடி கறுத்தப் பாலத்தின் கீழ் நீரில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்றை  கண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

  • பகிடிவதை: சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை

    இரத்தினபுரி: சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  • காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2014 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2014ம் ஆண்டு கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு கடந்த 16-02-2015 திங்கட்கிழமை நாவற்குடா ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • வாழ்க்கைச் செலவை வெகுவாகக் குறைக்க நெல் அரிசி உற்பத்தி சந்தைப்படுத்தல் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும்..!

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: கடந்த ஆட்சிக் காலத்தில் அரிசி உற்பத்தியில் இந்த நாடு தன்னிறைவு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அதேபோன்று முன்னேற்றமும் காணப்பட்டது, என்றாலும் நெல் விவசாயிகளுக்கு உரிய விலையை பெற்றுக் கொள்வதில் பெரும் போராட்டங்கள் இடம் பெற்றன.

  • சமுர்த்தி ஊழியர்களின் சேமலாபநிதி மீள வழங்கப்படும்

    கொழும்பு: சமுர்த்தி மற்றும் ‘திவிநெகும’ துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

  • ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

    அங்காரா: துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  • ஈராக்கில் 45 பேரை எரித்துக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

    பக்தாத்: ஈராக்கின் மேற்கு நகரான அல்-பக்தாதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் 45 பேரை எரித்துக் கொலை செய்துள்ளனர் என இராக்கிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு எரிக்கப்பட்டவர்கள் யார், என்ன காரணத்துக்காக எரிக்கப்பட்டுள்ளார்கள் , என்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் அவர்களில் சிலர், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக ஈராக்கிய பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

  • வளர்பிறையின் அதிரடிக்கு ஈடுகொடுக்கத் தவறிய அல் -அக்ஸா (காணொளி)

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: மாவடிச்சேனை அல்-இக்றாஹ் விளையாட்டுக் கழகத்தின் இருபதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பதினாறு விளையாட்டுக் கழகங்களை கொண்டு நடாத்தப்பட்ட அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட கடினபந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகமானது ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகத்தின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவ்வருடத்துக்கான இக்றாஹ் T20 கிண்ணத்தினை வளர்பிறை அணியிடம் இழந்தது.

  • துருவம் ஊடக வலையமைப்பு நடாத்தும் இலவச ஊடக செயலமர்வு

    பைரூஸ் முஹம்மட் மட்டக்களப்பு: துருவம் ஊடக வலையமைப்பு இரண்டாவது தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ‘ஊடகங்கள் வாயிலாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் இச்செயலமர்வு மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இது முற்றிலும் இலவசமானது.

←Previous Page
1 … 517 518 519 520 521 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar