-
உலகலாவிய இளைஞா் தலைமைத்துவ வேலைத்திட்டம் – 2015
எம்.ரீ.எம்.பாரிஸ் வாகரை: உலகலாவிய இளைஞா் தலைமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இளைஞா் பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக புரித்துணர்வு மற்றும் மனித நேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் ‘நிப்பொண்மாரு’ (NIPPONMARU) ‘நல்லென்ன உலக சுற்றுலா’ நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக 17.02.2014 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்கு ஜப்பான் நாட்டு சார்பில் வருகை தந்த இளைஞா், யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு வாகரையில் இடம் பெற்றது.
-
கீர்த்தி திஸாநாயக்க கைது
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக இருந்த கீர்த்தி திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-
யால சரணாலயத்தில் கஞ்சா பயிரிட்ட 11 பேர் கைது
யால: யால சரணாலயத்தின் – கந்தகெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா செய்கையினை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நாமல் ராஜபக்சவின் கலாநிதி பட்டப் படிப்பு குறித்து விசாரணை
கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வரும் குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டப் படிப்புக்கான அனுமதி பெறப்பட்ட விதம் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விசாரணை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
-
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து உடனடி நடவடிக்கை அவசியம்: பைஸர் முஸ்தபா
கொழும்பு: நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் உரிய தீர்வை எதிர்பார்ப் பதாகவும் குறிப்பிட்டார்.
-
வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் குருநாகல்: வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25வது வெள்ளி விழா நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் பிறைட் பிறவ் ஹோட்டலில் இடம்பெற்ற போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக வடமேல் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஜனூர் கிசிலானினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படுவதையும், கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
-
காத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழா
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: நாகரீக மோகத்தினுள் திளைத்துள்ள இன்றைய இளைஞர் சமுதாயம் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடிப்படைகளை பின்பற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு காத்தான்குடி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தெரிவித்தார்.
-
நாடளாவியரீதியில் 52 ஆயிரம் மாணவர்கள் இணைந்து கல்வி பயிலும் மக்தப் பாடத்திட்டத்தில் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்
புதிய காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் நாடளாவியரீதியில் 53 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்ற மக்தப் பாடத்திட்டத்தில் EXPRESS CLASS க்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 7 தொடக்கம் 12 வயது வரையுள்ள மாணவிகளிடம் இருந்து கோரப்படுகின்றன.
-
வங்கிகளிலிருந்து கோடிகளை எப்படி கணினிக் குற்றவாளிகள் திருடினர்?
லண்டன்: மிகவும் நுட்பமான கணினித் தாக்குதல் ஒன்றில், 30 நாடுகளில் சுமார் 100 வங்கிகளில் இருந்து பல நூறு மிலியன் டொலர்கள் பணம் திருடப்பட்டிருக்கிறது என்று ரஷ்ய கணினிப் பாதுகாப்பு நிறுவனமான “கஸ்பர்ஸ்கி லப்” கூறுகிறது. அவர்கள் கையாண்ட முறை என்ன?
-
இந்தியா இலங்கைக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம்
புதுடில்லி: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
-
போகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கொள்ளை
எம்.ஐ.அப்துல் நஸார் போகந்தர: பிலியந்தலை போகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கிக் கிளையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
-
மின்னல் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தும் இன்னல் – மசூர் மௌலானா
மசூர் மௌலானா கொழும்பு: ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தார்மீகப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு இனங்களுக்கிடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமே தவிர, சகோதர இனங்களுக்குள் இனவாத சர்ச்சைகளை மூட்டி நாட்டில் மறுபடியும் அமைதியின்மையை தோற்றுவிக்கக் கூடாது.