-
இந்தியாவில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்
டெல்லி: இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல் நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாத மத்தியிலிருந்து 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரத்திற்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
-
துபாயில் 79 அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து
துபாய்: துபாயிலுள்ள உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடங்கள் ஒன்றில் தீப்பற்றியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.துபாய் மரினாப் பகுதியிலுள்ள ‘டோர்ச் டவரின்’ 50ஆவது மாடியில் ஏற்பட்ட அந்தத் தீ, விரைவாக அந்தக் கட்டிடத்தின் பல பகுதிகளுக்கு பரவியது என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
-
மட்- மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 20ஆவது விளையாட்டு விழா
– எம்.ரீ.எம். பாரிஸ் மீராவோடை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 20ஆவது மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டியும் பாடசாலையின் புதிய அரங்கு திறப்பு விழா நிகழ்வும் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல்ஹஸன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (21) பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
-
நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை: மனோ கணேசன்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம், இனவாதத்தை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த நினைக்கும் ஒரு மிகப்பழைய முயற்சியாகும்.
-
”இனியும் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு”
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஏறாவூர்: ”இனியும் வெல்லுவாரு எப்படி என்று மேடையில் சொல்லுவாரு” இவ்வாறு வசனங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரமொன்று முன்னால் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பு பிரதேசங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
-
அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தின் 28வது வருட அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வின் முதலாவது நிகழ்வு 21-02-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப்பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
மஹிந்தவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர முயற்சி
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு கொண்டு வர சிரேஸ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவசர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
பாகிஸ்தான் V மேற்கிந்தியத் தீவுகள்: நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச தீர்மானம்
– MJ கிறைஸ்சேர்ச்: உலகக் கிண்ணத்தின் 10வது போட்டி, நியுசிலாந்தின் கிறைஸ்சேர்ச் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு ஆரம்பமாகிறது.
-
மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது
குஜராத்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார்.
-
இந்த சமூகத்திற்கு விடிவினை தேடிக் கொடுக்க வேண்டும் என்றால் அன்று இருந்த ஆயுதம் இந்த அரசியல் தான்”: அமைச்சர் றிஷாத்
மன்னார்: எனது 15 வருட அரசியல் வாழ்வில் பிரதேச வாதம், இனவாதம் பற்றி சிந்தித்ததே இல்லை என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், இந்த இரண்டும் எமது மக்களின் முன்னேற்றத்திற்கு சாபக்கேடு எனவும் கூறினார்.
-
“எனது அரசியல் பணி முஸ்லீம் காங்கிரஸிலே தொடரும்”: எ.சி. யஹியாகான்
அம்பாறை: இந்த புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்ட பிறகு அம்பாறை மாவட்டதைச் சேர்ந்த ஒரு சில சில்லறைகள் எனது தாய் மாமனான மயோன் முஸ்தப்பாவை வைத்து வியாபரம் செய்து கொண்டு வருகின்றார்கள். கடந்த கால அரசாங்கத்தினால் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் நாடு திரும்புவதும் திரும்பாமல் இருப்பதும் மற்றும் அரசியலில் ஈடுபடுவதும் ஈடுபடாமல் இருப்பதும் அவருடைய விருப்பம்.
-
ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடியில் மூன்று பாடசாலைகளுக்கு டெனிஸ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் மூன்று பாடசாலைகளுக்கு டெனிஸ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. MLAM. ஹிஸ்புல்லாஹ்வின் (பா.உ.) நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 19-02-2015 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.