-
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
ALM. தாஹிர் கொழும்பு: வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ள மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரான்சியஸ் க்லோடோஸ் மற்றும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு
இஸ்லாமிக் சென்றர் / பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணர்களுக்காக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த கல்விக் கருத்தரங்கு 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் மாலை 6.15 மணிவரை இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்
திருகோணமலை: 100 நாள் வேலைத்திட்டம் சம்பந்தமாக அங்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
‘இனச்சுத்திகரிப்பு’: தீர்மானம் கோரும் வடக்கு முஸ்லிம் அமைப்பு
யாழ்ப்பாணம்: இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது.
-
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையிலுள்ள வளவொன்றில் இடம்பெற்றது.
-
முசலி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் முசலி: மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகள், மத தளங்கள், மீனவ சங்கங்கள் என்பனவற்றுக்கான உதவிகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரமான றிசாத் பதியுதீன் இன்று காலை வழங்கி வைத்தார்.
-
மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் 1992 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பழைய மாணவர்களினால் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
சமயப் பன்மைத்துவத்தை மக்கள் மயப்படுத்தும் தாக்கமுள்ள கலையே வானொலி நாடகம்: பேராசிரியர் . டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர
எம்.ரீ.எம். பாரிஸ் கொழும்பு: சமயப் பன்மைத்துவத்தை மிகவும் தாக்கமாக மக்களிடம் கொண்டும் செல்லும் கலைகளில் மிகவும் துரிதமானதே வானொலி நாடகம் என இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் டப்ளிவ். டி. பீ. வணிகசுந்தர தெரிவித்துள்ளார்.
-
பள்ளிவாயலில் 25 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம். ஆதம்பாவா பலாஹியின் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம். ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பெரிய மௌலானா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
முசலி பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழு விஜயம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலக்குளி, கொண்டச்சி, காயாக்குளி, தம்பட்டை முதலியார் கட்டு, கொக்குபடையான், கொண்டச்சிகுடா, சிலாவத்துறை கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை (2015-02-21) மேற்கொண்டார்.
-
புத்தளத்தில் தற்காலிக இணைப்புப் பெற்றுள்ள மன்னார் வலய ஆசிரியர்களுக்கு மேலும் ஆறுமாதம் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புத்தளம்: மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 பாடசாலைகள், புத்தளம் பிரதேசத்தில் அங்கு இடம்பெயர்ந்திருக்கின்ற வடக்கு மாகாண முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி இயங்கிவருகின்றமை அறியப்பட்ட விடயமே 2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்து அப்போதைய அரசாங்கத்தினால் வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.