-
காத்தான்குடி வீதி அபிவிருத்தியில் NFGG-UNPயின் கூட்டு நடவடிக்கை
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வீதி அபிவிருத்தி தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆகியன இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
-
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய அடையான அட்டைக்கான நடமாடும் சேவை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 164ஏ, 164பி, 164சீ, 165ஏ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கான தேசிய அடையான அட்டைக்கான நடமாடும் சேவை இன்று 24-02-2015 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி-04, குபா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
தேர்தல் தொகுதி மீள்நிர்ணயம் தேர்தலுக்கு முன்னரே இடம் பெரும் சாத்தியக் கூறுகள்..!
– கலாநிதி ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி மாற்றத்தின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க இணக்கம் கண்டுள்ளன.
-
“இந்த வன்னி மாவட்டத்தில அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியல் அந்தஸ்த்தில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று எமது நிலைமை தொடர்பில் எதுவும் கூறி இருக்க முடியாது”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: இந்த வன்னி மாவட்டத்தில அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியல் அந்தஸ்த்தில் இல்லாமல் இருந்திருந்தால் இன்று எமது நிலைமை தொடர்பில் எதுவும் கூறி இருக்க முடியாது. நான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினராக அந்த கட்சியின் மேம்பாட்டுக்காக 20 வருடங்களுக்கு மேலாக பாடுபட்டவன் என்ற வகையில் றிசாத் பதியுதீனின் பயணமே சரரியானது
-
“இன்னும் 3 வருடங்கள் விளையாடுவேன்”: டில்சான்
கொழும்பு: உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2015 உடன், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர். இந்நிலையில், இன்னொரு சிரேஷ்ட வீரரான, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்சானும் தனது ஓய்வை அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
-
விமலும் மனைவியும் பிறந்த தினங்களை மாற்றியிருப்பது ஊர்ஜிதமானது
கொழும்பு: முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவன்சவும் அவரது மனைவி சசி வீரவன்சவும் தமது பிறந்த தினங்களையும் பெயரையும் மாற்றியிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
-
புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பும், கவிதை நூல் வெளியிட்டு விழாவும்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பும், கவிதை நூல் வெளியிட்டு விழாவும் நேற்று மாலை பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
-
கண்டி மாவட்டத்தில் NFGGயின் மக்கள் சந்திப்புக்கள்
ஊடகப்பிரிவு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) மக்கள் சந்திப்புகள் கடந்த 21, 22ம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் பல தொடர்ச்சியாக இடம் பெற்றன.
-
பழைய விலைகளில் பொருட்களை விற்பனை செய்த 50 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
கண்டி: அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மூலம் பொதுமக்களின் நலன் கருதி விலை குறைக்கப்பட்ட 13 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்காமல் பழைய விலைகளுக்கு விற்பனை செய்த சுமார் 50 வர்த்தகர்களுக்கு எதிராக கண்டி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி எம்.என்.பி. மதாராகான தெரிவித்துள்ளார்.
-
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்: அமைச்சர் ஹசன் அலி
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை கண்டறிவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டார்.
-
கல்வி இன, மதங்களுக்கு அப்பால் மனித நேயம் கொண்டவர்களை உருவாக்கும்: றிசாத் பதியுதீன்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.