-
ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி ஜனாதிபதி நாளை வழங்குவார்
கொழும்பு: முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ‘பீல்ட் மார்ஷல்’ பதவி வழங்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறுகிறது. முப்படையில் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒத்ததாக கருதப்படுகிறது.
-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மைத்திரியும் தயக்கம்!!
கொழும்பு: இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முன்வரைவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் தவணைக் காலத்தை இரண்டு தடவைகளுக்கு வரையறுப்பது, பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது மற்றும் நாடாளுமன்றம் நாலரை
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மகளிர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை வரவேற்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி மகளிர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை வரவேற்கும் நிகழ்வு 20-03-2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸாவின் காத்தான்குடி இல்லத்தில் இடம்பெற்றது.
-
“இளைஞர்கள் மார்க்கக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் டுவிட்டர்களிலும் பேஸ்புக்குகளிலும் காலத்தை கடத்துகின்றனர். இவர்கள் மார்க்க கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
கிழக்கு மாகாண முதலைச்சரின் தீர்மானத்திற்கோர் சமர்ப்பனம்
இது நமது கதை அண்மையில் நானோர் அபலையைக் கண்டேன் அவளது கண்ணீரை என் பேனாவால் நிரப்பினேன் சமீனா ஈமான் கொண்ட எங்கள் சகோதரி மூத்தவள் என்பதால் பூத்தது முதலாய் காத்தது வீடு அவித்தது சோறு
-
அமைதிக்கு திரும்புகிறது காத்தான்குடி…
– நமது நிருபர் காத்தான்குடி: உலககக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் நிறைவுக்கு வர இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், 1980 களில் இருந்து இன்றுவரை காத்தான்குடியில் இருந்துவரும் இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் இரசிகர்களின் போட்டிகளும் நட்புச் சண்டைகளும் முடிவுக்கு வருகின்றன.
-
“முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும்”: முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்
– ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: முதலமைச்சர் பதவி என்பது அடையாளத்தை காட்டுகின்ற ஒரு பதவியாகும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டிய சிந்திக்க வேண்டிய காலமும் இதுவேயாகும் எமது ஒற்றுமையில்தான் எமது எதிர்கால வெற்றி தங்கியுள்ளது என (20.03.2015 வெள்ளிக்கிழமை) இன்று காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற விசேட உரையில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஒட்டமாவடி: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச அரச சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
-
மூன்றாவது காலிறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
அடிலெய்ட்: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்
ஏ.எல். டீன் பைரூஸ் காத்தான்குடி: கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பில் விஜயம் செய்ய இருப்பதாக மாகாண நபை உறுப்பினரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.