Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை  வருடாந்தம் நடாத்தும் சாதனையாளர்கள் பாராட்டு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இவ்வருடமும் இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின்  செயலாளர் ஏ எல் எம் சபீல் நளீமி தெரிவித்தார்.

  • காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடனின் களச்சுற்றுலா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி  பிஸ்மி கின்டர்காடன் அங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு வெறுமனே புத்தக கல்வியை மாத்திரம் வழங்குவது என்பதற்கு அப்பால் நடைமுறை ரீதியாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது.

  • காத்தான்குடி பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் புதிய நிருவாகிகள் தெரிவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் 19-03-2015 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் கே.எம்.ஏ. அஸீஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

  • இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டத்தில் யாழ் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பில் நியாயம் வழங்கப்பட வேண்டும்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா யாழ்ப்பாணம்: 30 வருடமாக தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது மீண்டும் அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக கொண்டுவரப்படுகின்ற தீர்வு திட்டத்திற்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள். அதே போல் இந்த தீர்வில் முஸ்லிம்களின் சரியான பங்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், யாழில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பில் இங்கிருக்கின்ற அதிகாரிகள் தமது…

  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியினை இந்திய ஊடகங்கள் தவறாக சித்தரிப்பு: அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்

    ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: இந்திய மீனவர்கள் தொடர்பாக ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியினை இந்தியாவைச் சேர்ந்த சில ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  • மன்னார் மாவட்டத்தின் காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி (விடத்தில்தீவு சந்தியிலிருந்து) பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

  • வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு மகஜர்

    ஹாசிப் யாஸீன் யாழ்ப்பாணம்: வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ‘இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை’ என்பதை ஏற்று வட மாகாண சபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு மகஜரினை அகில இலங்கை இஸ்லாமிய இளைஞர் முன்னணி அனுப்பி வைத்துள்ளது. 

  • கற்றவர்கள் எல்லோரும் மென்போருட்களாகவே இருக்க வேண்டுமா?

    மஸிஹுதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: கொழும்பு புறக்கோட்டை முதல் காலி வீதி நெடுகிலும் உள்ள வர்த்தகர்களை மாத்திரமன்றி நாட்டின் ஏனைய நகர்களிலும், ஊர்களிலும் உள்ள வர்த்தகர்களை, தொழில் அதிபர்களை அல்லது அவர்களில் கணிசமானவர்களை சந்தித்து ஒரு ஆய்வினை பல்கலைக் மாணவர் சமூகம் செய்தல் சிறந்தது.

  • கட்டார் அமீர் இலங்கை வருகை

    அப்துல் ஜப்பார் கொழும்பு: கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வர உத்தேசித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • உலக கோப்பை போட்டிகளில் மோசமான ஆட்டம் இது: மெத்யூஸ்

    சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பரபரப்பாக நடைபெற்ற உலக கோப்பை காலிறுதி போட்டியில் இலங்கை அணி தென் ஆபிரிக்காவிடம் தோல்வியடைந்தது. சங்கக்கார, மஹேல ஜயவர்தன இருவரும் உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.

  • ஏப்ரல் 23ல் பாராளுமன்றத்தை கலைத்தால் மாற்றுவழியைக் கையாளும் நிலை ஏற்படும்

    கொழும்பு: பாராளுமன்றத்தை ஏப்ரல் 23 ஆம் திகதியன்று ஆளும் கட்சி கலைக்குமாகவிருந்தால் பெரும்பான்மை பலமுடையவர்களென்ற வகையில் நாம் மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

  • “புலம் பெயர்ந்தவர்கள் அச்சமின்றி தாராளமாக இலங்கை வரலாம்”

    கொழும்பு: புலம் பெயர்ந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கைக்கு வரலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் எல்லாம் பிரிவினைக்காகச் செயற்பட வில்லையென்பதை தான் இலண்டன் சென்றிருந்தபோது நேரடியாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலண்டனில் ஒருசில அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.

←Previous Page
1 … 488 489 490 491 492 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar