அடிலெய்ட்: உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவது காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று போட்டியிடவுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இப்போட்டி பெரும் சவாலாக இருக்குமென அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Published by


Leave a comment