-
புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!
யாழ்ப்பாணம்: புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது வைத்தியசாலை அருகில் கூடிய குறித்த நபர்களை தாக்கியுள்ளனர்.
-
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: வவுனியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வழங்கியுள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் இடாப்புப் பதிவுக்கான விண்ணப்பப்படிவத்தை வீடுகளுக்குச் சென்று நேரில் வழங்குவதற்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் நடவடிக்கை!
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதிய காத்தான்குடி 167 பீ கிராம உத்தியோகத்தர், 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புப் பதிவு விண்ணப்பப் படிவங்களை குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று நேரடியாக விநியோகிக்காமல் அவரது அலுவலகத்திற்கு பொதுமக்களை வந்து பெற்றுக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோள் தொடர்பில் காத்தான்குடி
-
வடமாகாணமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணம்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் உணர்ச்சிபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் விசேட மத வழிபாடுகள் என்பன இடம்பெறுகின்றன.
-
புங்குடுதீவு மாணவி கொலை: குற்றவாளிகளுக்குத் தாங்களே தண்டனை வழங்க வேண்டும் என ஊர் மக்கள் போராட்டத்தால் பதட்டம்!
புங்குடுதீவு: புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டுபாய் மெரியட் ஹோட்டலும் மஹிந்தவும்….
கொழும்பு: டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் குறித்து இலங்கை ஊடகங்களில் கடந்த வருடம் அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. இதன் உரிமையாளராக இலங்கையில் பிறந்த வர்த்தகர் நந்தன லொக்குவிதான உள்ளார். ஆனால் தற்போது வேறுவிதமான வதந்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொடர்புபடுத்தி உலாவுகின்றன.
-
கி.மா. உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த 13ம் திகதி காத்தான்குடியில் நடைபெற்ற ஐம்பெரும் எழுச்சி விழாவில் பங்கேற்று உரையாற்றிய உங்களின் அரசியல் குருநாதரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அவரது உரையின் இறுதியில் உங்களை ‘ஏமற்றுக்காரன்’
-
தலதாமாளிகைக்கு முன்பாதை பாவனைக்கு திறந்துவிடக்கூடாது: அஸ்கிரிய பீடாதிபதி
கண்டி: கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள பாதையை பொதுமக்களின் போக்கு வரத்திற்காக திறந்து விட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடமளிக்ககூடாது என கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் சலகம ஸ்ரீ அத்த தஸ்ஸி தெரிவித்தார்.
-
மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆசிரியர்களது கவனத்திற்கு
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். சம்மாந்துறை: ஆசிரியர்கள் மாணவர்களை இலங்கையின் வரலாற்றுப் புராதண இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவின் நிமிர்த்தம் அழைத்துச் செல்கின்ற போது அவ் வரலாற்றுப் புராதண இடங்கள் தொடர்பான அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி அழைத்துச் செல்ல வேண்டும்.
-
மஹிந்தவின் பிரதமர் கனவுக்கு 98 பா.உ. ஆதரவு
கொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு குறைந்தது 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் டி எம் ஜெயரத்ன செயலாளராக இருக்கும், மக்கள் கூட்டமைப்பு கட்சியின் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
-
மஹிந்த தலைமையில் யுத்த வெற்றி நிகழ்வு
கொழும்பு: யுத்த வெற்றி நிகழ்வு இம்முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. தாய்நாடு அமைப்பு என்ற அமைப்பே இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது.