-
“நாட்டின் அரசியல் வரலாற்றில் அபூர்வமான ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன திகழ்கிறார்”: அமைச்சர் ஹக்கீம் புகழாரம்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிறாத அரசியல்வாதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திகழ்கிறார். முன்னாள் ஜனாதிபதி தனக்கு இரண்டு தடவைகள் போதாது மூன்று தடவைகளல்ல வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கவே ஆசைப்பட்டார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கிருந்த அதிகாரங்களை குறைத்துள்ளதுடன் இரு தடவைகள் ஜனாதிபதியாக இருக்கலாம் என்றபோதும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாக
-
“பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கக் கூடாது” ஹரீஸ்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: இருபதாவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களின் பேரம்பேசும் சக்தியினை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கக் கூடாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
-
லாபிர் ஹாஜியார் கண்டியில் தனித்து களமிறங்குகறார்?
கண்டி: மத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லாபிர் ஹாஜியார் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இடம் கிடைக்காவிட்டால் தனித்து சுயேட்சை குழுவாக களமிறங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
-
இளைஞர்களை மடக்கும் ஐ.எஸ் அமைப்பின் ‘ஹனி ட்ரப்’
– AF-90 லண்டன்: உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் இளைஞர்களை தனது இயக்கத்தின் பக்கம் திருப்ப ஐஎஸ் அமைப்பு என்ன மாதிரியெல்லாம் செயல்படுகிறது என்பது குறித்த விவரம் படிப்படியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில், பெண்களை வைத்து இளைஞர்களை தன் வயப்படுத்தும் முயற்சியிலும் அந்த அமைப்பு ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
-
18வது குழந்தையைப் பெற்றெடுத்த பிரிட்டனின் பெரிய குடும்பம்!
லண்டன்: பிரிட்டனில் ஏற்கனவே 2 பேரக் குழந்தைகள் உள்ள தம்பதி தங்களது 18வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளது. ஹெல்லி அல்பியா பியு என்று இப்பெண் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அக்குழந்தையின் புகைப்படத்தை குழந்தையின் தாய் சுவ் ரோட்போர்ட் மற்றும் தந்தை நோயல் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்துள்ளனர்.
-
முதலாவது பதக்கத்தை வென்றது இலங்கை
பீஜிங்: சீனாவில் நடைபெறும் 21ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது.800 மீற்றர் மகளிருக்கான ஓட்டப் போட்டியில் நிமாலி லியன ஆராச்சி வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இவர் இரண்டு நிமிடங்கள் 3.94 செக்கன்களில் நிமாலி, போட்டித் தூரத்தை நிறைவு செய்தார்.
-
கோட்டாபயவை நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை
கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. நாட்டின் காவல்துறை தலைவர், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் பிரிவுகள் ஆகியவை மட்டுமே அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
கொழும்பு – தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கொழும்பு – தெமட்டகொடை யுனைடட் கழகம் ஏற்பாடு செய்த 15 வது வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் மீலாத் நபி போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கரம் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
சமூக நலன் பேணும் அமைப்பின் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்-75 பேர் இரத்தம் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
புதுக்குடியிறுப்பு டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பார்வை
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: யுத்தத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பார்வையிட்டுள்ளார்.
-
குவைத்தில் புனித ரமழான் (2015 / 1436) சிறப்பு நிகழ்ச்சிகள் – அழைப்பிதழ்
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு (2015) புனித ரமழான் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.