-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு (ஒடியோ)
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று 06-06-2015 நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள மாகாண சபை உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
“திண்மக்கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் எமது அணுகுமுறை என்ன..?” NFGG நடாத்திய விசேட ஊடக சந்திப்பு..! (ஒலிப்பதிவு)
– NFGG, பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் பிரச்சினை தொடர்பில் NFGGயினால் மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (06.06.2015) பிற்பகல் காத்தான்குடியில் நடை பெற்றது.
-
சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் சிகரம்: ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் 60 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
-
மனிதன் வாழ்வின் சகல அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு ரமழான் மாதம்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மனிதன் தனது ஆசாபாசங்களை இச்சைகளை உள்ளுணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துதனது சொல் செயல அங்கீகாரம் உற்பட வாழ்வின் சகல அங்கங்களிலும் அமசங்களிலும் புனிதனாக்கப்படும் புனித மிகு மாதமே ரமழான் மாதமாகும்.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணண் பங்கேற்பு
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா (05.06.2015) வெள்ளிக்கிழமை பி.ப.03.30) கல்லூரியின் அதிபர் கெப்டன் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் நடை பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணண் கலந்து கொண்டார்.
-
“வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்களாலும் பார்த்தேன்”: ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன
பொலன்னறுவை: வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்களாலும் பார்த்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றபோது, விமானத்தில் இருந்தபடியே வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தனது இரு கண்களாலும் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐரோப்பாவின் சம்பியனானது பார்ஸிலோனா!
– MJ பேர்லின்: சற்று முன்னர் ஜேர்மனியின் பேர்லின் நகரின் ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய சம்பியன் லீக் இறுதியாட்டத்தில் 3:1 எனும் கோல் அடிப்படையில் ஜிவிண்டஸ் அணியைத் தோல்வியடையச் செய்து, பார்ஸிலோனா ஐரோப்பாவின் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
-
பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி காத்தான்குடி திவிநெகும உத்தியோகத்தர்கள் சந்திப்பு
எம். எச் .எம். அன்வர் காத்தான்குடி: சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி நேற்று காத்தான்குடி பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்களை சந்தித்து காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் திரிய சவிய கடன் திட்டம் கொடுக்கும்போது ஏற்படும் சவால்கள் மற்றும் தடைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
-
கர்பலா கிராமத்தில் 100 வீடுகள் கொண்ட மாடி மனைத் திட்டம்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் கர்பலா: அமரர் பிரேமதாஸ 44 வீடுகளை நிர்மாணித்து உருவாக்கிய கர்பலா கிராமத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிர்மானிக்கவுள்ள 100 வீடுகள் கொண்ட மாடி மனைத் திட்டம் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கர்பலா கிராமத்தில் மேலும் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சர் சஜித் பிரேமதாஸ துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின்…
-
சவுதியை நோக்கி ஹூத்திகள் ஏவுகணை வீச்சு
றியாத்: எமனில் இருந்து ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களால் தமது நாட்டுக்குள் ஏவப்பட்ட ஸ்கட் ஏவுகணை ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. இரவு வேளையில் தமது நாட்டை நோக்கி வந்த அந்த ”ஸ்கட்” ஏவுகணையை ”பட்ரியாட்” ஏவுகணை கண்டுபிடித்து தடுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
காத்தான்குடி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டிக்கான பாலர் விளையாட்டு விழா
– ஏ.எல். டீன்பைருஸ் காத்தான்குடி: காத்தான்குடி அமானா கிட்ஸ் பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டிக்கான பாலர் விளையாட்டு விழா (5.06.215 வெள்ளிக்கிழமை பி.ப.02.00) காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் அதன் பணிப்பாளர் எம்.ஐ.எம்.அன்வர் (ஆசிரியர்) தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் இலங்கை திறந்த பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளருமான திருமதி. ஆர். சீனிவாசன் கலந்து கொண்டார்.
-
காத்தான்குடி ‘அல்அக்ஸா’ பள்ளிவாயலுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்
– ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்(அல்அக்ஸா வடிவிலான) பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட வேலைகள் சென்ற 09.03.2015 ஆம் திகதி ஆரம்பமானதுடன் கட்டுமான வேளைகள் இன்றுவரை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இதனைப்பார்வையிட (06.06.2015 சனிக்கிழமை) காலை முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.