-
“தமிழ் கூட்டமைப்பு வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு பச்சைக்கொடி காட்டவேண்டும்”: எம்.எஸ்.சுபைர்
– ஏறாவூர் அபூ பயாஸ் திருகோணமலை: கிழக்கு மாகாணசபை நேற்று (16) காலை கூடியபோது ,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பிரேரணையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எம்.எஸ்.சுபைர், தொடர்ந்து உரையாற்றுகையில்.
-
காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல் பஜ்ர் காரியாலயத்தில் தலைவர் அலஹாஜ் எஸ் ஏ கே பழீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
-
“இன்று எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான்”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா மன்னார்: இன்று எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், அரசியலை மக்களின் விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாகும் என்றும் கூறினார்.
-
50 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான மெகி நூடுல்ஸ் அழிப்பு
டெல்லி: இந்தியாவில் மெகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தயாரிக்கும் நிறுவனமான நெஸ்லே இந்தியா ஐம்பது மில்லியன் டொலர்கள் மதிப்பிலான, உடனடியாக சமைத்து சாப்பிடக் கூடிய நூடுல்ஸ்களை அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
-
முகம்மது மொர்ஸிக்கு ஆயுள் தண்டனை
கெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது மொர்ஸிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.பலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா, ஈரான் ஆகியவற்றுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முகம்மது மொர்ஸிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
6 மாதங்களில் 100 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ள சவுதி!!
– AF-90 ரியாத்: இந்த ஆண்டில் நூறாவது நபரின் தலையை துண்டித்து சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் சவுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த நபர் ஆகியோரின் தலையை துண்டித்ததன் மூலம் கடந்த ஆறே மாதங்களில் நூறு பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா.
-
இஸ்லாம் கூறும் திருமணம்
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா, 07.06.2015 (ஞாயிற்றுக்கிழமை)
-
டுவிட்டரில் 140 எழுத்து கட்டுப்பாட்டில் தளர்வு
நியுயோர்க்: டுவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140லிருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின் படி தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
அதிக ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதமர் பதவி
கொழும்பு: புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். சிறுபான்மைக் கட்சிகளுக்கும் நன்மையளிப்பதாகவே புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவசர அவசரமாக அன்றி ஐந்து வருடங்களின் பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
-
பாலமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் மாபில் கற்கள் அன்பளிப்பு
ஏ.எல். டீன்பைரூஸ் பாலமுனை: ஆரயம்பதி பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பதினைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மாபில்கள் கையளிக்கும் நிகழ்வு (15.06.2015 திங்கள்) மஃரிப் தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தலைமையில் இடம் பெற்றது.
-
பசிலுக்கு பிணை: கடவுச்சீட்டு பறிமுதல்
கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது. ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் பசிலுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
-
20ஆவது திருத்தத்திற்கு அங்கீகரத்தைப் பெறுவது சாத்தியமல்லை, பொதுத்தேர்தல் அவசியம்: ஐ.தே.க ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் கோரிக்கை
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: பாராளுமன்றத்தை மிக விரைவில் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் எழுத்து மூலம் கோருவதாக வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா இன்று (15) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.