-
புத்தளம் வர்த்தக நிலையத் தொகுதிக் கட்டடத் தீ விபத்து
– புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளம் பஸ்தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக கட்டிடத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையம் முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர். கடைத்தொகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமே இந்த விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.
-
“மாற்றம் என்பது மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவது மாத்திரமல்ல, நல்லாட்சியும் உருவாக வேண்டும்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி என்கின்ற தீமையை ஓழிப்பதற்காக மட்டுமல்ல. நிரந்தரமான நல்லாட்சியை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அந்த மாற்றத்தை உருவாக்கினார்கள். அந்த நல்லாட்சிக்கான அத்திவாரத்தை இடுவதில் பல தடைகள் உருவாக தொடங்கியுள்ளன.” என NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
குறுக்கு வழியால் காவு கொள்ள முனையும் சக்திகளுக்கு ஜனாதிபதி மைத்ரி அடிபணியாது பாராளுமனறத்தை கலைக்க வேண்டும்!
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக வெற்றியீட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உடனடியாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைமைப் பதவிகளையும் கைப்பற்றியமை நாம் அறிந்த விடயமே.
-
“அறபு மொழி தெரிந்த அனைவராலும் அறபு மொழியை கற்பிக்க முடியாது”: அலியார் றியாதி
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: அறபு மொழி தெரிந்த அனைவராலும் கற்பித்தல் நுட்பங்களை அறிந்து கொள்ளாது அந்த மொழியை கற்பிக்க முடியாது என காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அலியார் (றியாதி) தெரிவித்தார்.
-
142 பாராளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த. உயர்தரம் கற்கவில்லை
கொழும்பு: அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 142 பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கூட சித்தியெய்தவில்லை என்று கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
-
ரமழான் பிறை தீர்மானிக்கும் விசேட மாநாடு புதன்கிழமை
கொழும்பு: ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விசேட மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால்
-
கனடாவில் புதிய குடிவரவு சட்டம்: ஒன்றரை இலட்சம் இலங்கையர் நாடு திரும்ப நேரிடலாம்
டொரண்டோ: கனடாவில் வகிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தினால் நடைமுறைப்ப டுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை பிரஜைகளான இவர்கள் பாதிக்கப்படலாம் என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
-
மாத்தரைக் கூட்டமும் மஹிந்த ஆதரவு அரசியலும்
மாத்தரை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தென்னிலங்கையிலுள்ள மாத்தரை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றாலும் அவர் உரையாற்றவில்லை.
-
அமெரிக்கா மீது இணையத்தாக்குதல்: 1.4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்!!
வாஷிங்டன்: சீனாவுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இணைய தாக்குதலாளிகள் அமெரிக்க புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகள் பற்றிய அதிமுக்கிய இரகசியத்தரவுகளை இணைய வழியாக கைப்பற்றியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
கூட்டு ஸக்காத் விழிப்புணர்வு கருத்தரங்கு
– எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸக்காத் பிரிவினால் கூட்டு ஸக்காத் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று காத்தான்குடி அல் மனார் அர் ராசிக் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸக்காத் பிரிவு தலைவர் மௌலவி ஏ எம் அலியார் றியாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக அஷ்ஷெய்ஹ் ஏ எம் அக்ரம் நளீமி கலந்து கொண்டார்.
-
மீள்குடியேறியிருக்கின்ற மக்களின் காணிகள் சரணாலயக் காடுகளை அழித்தே பெறப்பட்டவை என்ற கருத்து தவறானது: NFGG ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: மீள்குடியேறியிருக்கின்ற மக்களின் காணிகள் சரணாலயக் காடுகளை அழித்தே பெறப்பட்டவை என்ற கருத்து தவறானது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.
-
“மக்களின் ஆணையை மக்களுக்காக மாத்திரமே பயன்படுத்தும் பிரதிநிதிகள் வேண்டும்” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “மக்களின் ஆணையை மக்களுக்காக மாத்திரமே பயன்படுத்தும் பிரதிநிதிகள் நமக்கிருந்திருந்தால் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவிக்கிறார்.