கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியது. ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் பசிலுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவரது கடவுச்சீட்டை கடுவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment