Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி பூர்வீக நூதனசாலை காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது!

    காத்தான்குடி: காத்தான்குடி அருங்காட்சியகத்திலுள்ள சர்ச்சைக்குரிய உருவச்சிலைகள் மற்றும் பொம்மைகளை அகற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • திருமண பந்தத்தில் இணைந்தார் ஹிருணிகா

    கொழும்பு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவரே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார். திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு 20 பேருக்கு உட்படவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • தற்காலிக நியமனம் என்ற பெயரில் அதிகார துஷ்பிரயோகம்

    கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹ்மட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோரால் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஒப்பந்த மற்றும் பதிலீட்டு ஊழியர்கள் நியமனத்தில் காத்தான்குடி நகரசபைக்கென்று 2015.07.02 ஆம் திகதி 27 தனி நபர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

  • அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்பின்பேரில் சாய்ந்தமருது தாமரைக்கேணி குள அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருதின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியாக தாமரைக்கேணி குள அபிவிருத்தி வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆரம்ப நிகழ்வில் காணி மீட்பு அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் எம்.ஏ.ஹனீபா (மதனி) கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,

  • அதிகாரத்துக்காக அதிக நப்பாசை கொண்டோரில் மஹிந்த முதலாமிடம்

    கொழும்பு: அதிகாரத்தில் இருப்பதற்கு உலகத்திலேயே அதிகமாக பேராசைப்பட்ட நபர் மற்றும் குடும்பம் என்ற பெயர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பி விமர்சித்துள்ளது.

  • நான்கு கட்சிகளின் பெயர் சின்னங்களில் மாற்றம்

    கொழும்பு: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய அகில இலங்கை தமிழர் மகாசபை தமது தோடம்பழ சின்னத்தை கப்பல் சின்னமாக மாற்றியுள்ளது.

  • மத வழிபாட்டு தலங்களில் அரசியல் கூட்டங்களுக்கு தடை

    கொழும்பு: பொதுத் தேர்தலில் மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்துவது இம்முறை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

  • வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு: ஊர்வலங்களுக்குத் தடை

    கொழும்பு: எதிர்வரும் ஓகஸ்ட் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (06) திங்கட் கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • அர்ஜூன ரணதுங்க தலைமையிலான குழு ஐ.தே.கவில் இணைந்து போட்டி

    கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப் பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ. ம. சு. முவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

  • “ஜனாதிபதி மைத்திரிபால, ஊடகவியலாளர்களை சிறையில் தள்ளும் சட்டத்துக்கு உயிர்கொடுத்துள்ளார்”

    கொழும்பு: பத்திரிகை கவுன்சில் சட்டத்தின் (Press Council Law No. 5 of 1973) ஏற்பாடுகள் ஊடாக, இலங்கை பத்திரிகை கவுன்சிலை மீண்டும் இயங்கச் செய்வதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக சுதந்திரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற சுயாதீன ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு குற்றம்சாட்டுகின்றது.

  • “மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது”

    வவுனியா: கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்தின் தேவையுணர்ந்து எமது சமூகத்தின் நன்மைக்காக

  • இஸ்ரேலின் தேசிய மோசடி விசாரணைத் துறையின் தலைவர் தற்கொலை

    டெல் அவிவ்: இஸ்ரேல் காவல்துறையின் தேசிய மோசடி-விசாரணைத் துறையின் தலைவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை கூறுகின்றது. ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

←Previous Page
1 … 391 392 393 394 395 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar