-
விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு: 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிலாபம்: சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இப்தார் நிகழ்வு (காணொளி)
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் ஏற்பாட்டில் நேற்று 07.07.2015 செவவாய்க்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வு இடம்பெற்றது.
-
லண்டன் தாக்குதல்களின் பத்தாவது வருட நினைவுநாள் இன்று
லண்டன்: லண்டன் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது நடந்த தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டதன் பத்தாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் துவங்கியுள்ளன.
-
தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
பல்லேகலை: பல்லேகலையில் இடம்பெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றிபெற்றதன் மூலம், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
-
ரமழான் இறுதிப்பத்தும் எமது செய்திப் பதிவேற்றமும்
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வின் உதவியால் நாம் இன்று ரமழானின் இறுதிப்பத்தை அடைந்துள்ளோம். இப்புனித மாத இறுதியின் நல்லமல்களுக்காகவும், புனித “லைலதுல் கத்ர்” இரவை அடைந்துகொள்ளும் நோக்குடனும் நாள்தோரும் இருபத்து நான்கு மணித்தியாலங்களும் தொடர்ந்து செய்திகளைப் பதிவேற்றிவரும் எமது “யுவர்காத்தான்குடி” இணையத்தளத்தின் செய்திப் பதிவேற்றம், இன்றுடன் மட்டுப்படுத்தப்படுகிறது.
-
வேட்பு மனுக்கள் ஏற்பு ஆரம்பம்: இறுதி முடிவின்றி பிரதான கட்சிகள் திண்டாட்டம்
கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் தினங்களில் கட்சி தாவல்கள், கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரதான கட்சிகள் இறுதி நேரத்திலேயே வேட்பு மனுத் தாக்கல் செய்யும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
வவுனியா: விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை
-
“வட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் மஹிந்தவும், மைத்திரியும் ஒரே நிலையிலேயே இருக்கின்றனரோ…?”
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முசலி: மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி உள்ளிட்ட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களை மீணடும் அவர்களது மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கு சதி செய்யும் கும்பல்களுடன் பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார்.
-
துடிதுடிக்கப் பறிக்கப்பட்ட ஏறாவூரின் இதயம் தாவூத் மாஸ்டர்
– அகமட் இர்ஷாட்
-
றஊப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்யவேண்டும்
காதத்தான்குடி முன்னால் நகர சபை தலைவர் மர்சூக் அகமது லெவ்வை எழுதிய மடல் – ஏ.எல்.டீன்பைரூஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றது. இதனை கட்சியின் தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் சென்ற 02ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
-
“எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும்”
மட்டக்களப்பு: எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,