Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • துபாயில் இடம் பெற்ற வருடாந்த முதலீட்டு மகாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

    – ACM. சப்ரி துபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார வர்த்தக அமைச்சர் அஷ் ஷேக் ஷேக்  அல்மன்சூரி அவர்களின் அழைப்பினை ஏற்று துபாய் சென்ற இலங்கைக்கான  வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட்  பதியுதீன், 03 வது தடவையாக துபாயில் இடம்பெற்ற வருடாந்த முதலீட்டு மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டார் .

  • இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று

    கொழும்பு: நாடளாவிய 334 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இன்று  பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இளைஞர் விவகார திறனபிவிருத்தி, அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். இம்முறை தேர்தலில் 335 உறுப்பினர்களும் 77 செனட் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

  • 4000 கிராம சேவகர்களை இணைக்க திறந்த போட்டிப் பரீட்சை இன்று

    கொழும்பு: நாடளாவிய ரீதியில் 4000 கிராம சேவகர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இன்று நடைபெறுகிறது. நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 752 நிலையங்களில் இந்த திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறுவதுடன் 98,000 பரீட்சார்த்திகள் பரீட்சையில் பங்கேற்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

  • எனது தந்தை பயங்கரவாதி அல்ல: ஆஸாத் சாலியின் மகள் ஆமினா

    கொழும்பு: முஸ்லிம் சமூகத்தின் சமூகத்தின் விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

  • ஆஸாத் சாலியின் கைது இந்நாட்டின் சட்டம் பாரபட்சமான முறையில் அமுல் படுத்தப்படுவதனையே நிரூபிக்கிறது – நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

    – PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: இந்நாட்டில் அண்மைக் காலமாக சில இனவாத சக்திகளினால் எழுப்பப்பட்டு வரும் இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மிக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆஸாத் சாலியை அரசாங்கம் அநீதியான முறையில் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்பட்டிருப்பதையே இக்கைது சம்பவம் நிரூபித்துள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • என்னடா நடக்குது அங்கே ?

    -MJ பேனா எடுத்தவனின் கைகைய முறிப்பதும் குரல் கொடுத்தவனின் வாழ்வை சிறைப்படுத்துவதும் ஜனநாயக சோசலிச இலங்கை நாட்டின் புதிய கொள்கைகள்!

  • ‘காரணமின்றி 2 மணிநேரம் தடுத்துவைத்த காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும்’

    கொழும்பு: இலங்கையில் யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார்.

  • தனது குடும்பத்தினர் கொண்டு சென்ற உணவையும், சிறைச்சாலை உணவையும் அஸாட் சாலி உண்பதற்கு மறுத்தார்!

    கொழும்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம்! -AK77 கொழும்பு: நேற்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஸாத் சாலி, கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுத்த நிலையில், தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதியான விசாரணைக்கு எதிராக  உண்ணாவிரத்தை மேற்கொண்டிருந்தார்.

  • வலது குறைந்தோரை மேம்படுத்தும் வலைப்பின்னல் கலந்துரையாடல்

    – ரைஸ் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள வலது குறைந்தோரை உள்ளடக்கிய மேம்பாட்டுக் கல்வி (Inclusive Education) வழங்குதல் மற்றும் வலது குறைந்தோரை இலக்குக் குழுக்களாக கொண்ட அமைப்புக்களுக்கிடையிலான வலைப்பின்னலை ஏற்படுத்தல் போன்ற நோக்கத்திற்காக கிழக்குமாகாணத்தில் உள்ள வலது குறைந்தோருக்கு சேவை வழங்கும் அமைப்புக்களுக்கிடையிலான கூட்டம் அண்மையில்  மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

  • ‘மஹிந்த அரசின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது’: அஸாத் சாலியை விடுதலை செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

    – கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயரும்,  தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலியினை விடுதலை செய்யுமாறு கோறி இன்று  வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகையினையடுத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

  • காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன்; அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    – அபூ அய்யாஷ் காத்தான்குடி: காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன் அஷ்ஷெக் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்று வெள்ளிக்கிழமை காலை  மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

  • குவாண்டனமோ சிறையில் தொடரும் போராட்டம்

    -OIT நியூயோர்க்: அமெரிக்காவால் கியூபா அருகே குவாண்டனமோ சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற பயங்கரவாத சந்தேகநபர்களின் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு சந்தேக நபர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஒபாமா நிர்வாகம் படுகொலை செய்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை புஷ் ஆட்சிக்கால வழக்கறிஞர் ஜோன் பெல்லிங்கர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

←Previous Page
1 … 1,077 1,078 1,079 1,080 1,081 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar