குவாண்டனமோ சிறையில் தொடரும் போராட்டம்

-OIT

guantanamo-cp-5050381[1]நியூயோர்க்: அமெரிக்காவால் கியூபா அருகே குவாண்டனமோ சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற பயங்கரவாத சந்தேகநபர்களின் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு சந்தேக நபர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஒபாமா நிர்வாகம் படுகொலை செய்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை புஷ் ஆட்சிக்கால வழக்கறிஞர் ஜோன் பெல்லிங்கர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்காவால் 2002ஆம் ஆண்டு குவாண்டனமோ சிறைச்சாலை திறக்கப்பட்டது. உலகின் மிக கொடிய சித்தரவதை முகாமாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த முகாமில் பல நூற்றுக்கணக்கானோர் எந்த வித அடிப்படை உரிமை இல்லாமலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் சில கைதிகளுக்கு தொலைக்காட்சிஇ செல்போன் சேவை உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதால் கடந்த ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

guantanamo-cp-5050381[1]

இப்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு வலுக்கட்டாயமாக மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டும் வருகிறது.இதனிடையே புஷ் ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞராக இருந்த ஜோன் பெல்லிங்கர்இ குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவேன் என்று ஒபாமா உறுதியளித்திருந்தார்.

ஆனால் அதைச் செய்யவில்லை. தற்போது குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு பயங்கரவாதிகளை கைது செய்து அனுப்புவதற்கு பதிலாக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அவர்களை படுகொலை செய்கின்ற யுக்தியை ஒபாமா அரசு கடை பிடித்து வருகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம் என்று சாடியிருக்கிறார்.

half-of-guantanamo-on-hunger-strike-1366580859-2598[1]

ஒபாமா கைதிகளை விசாரிப்பதை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அதிரடி உத்தரவு

அமெரிக்க அதிபராகியுள்ள பாரக் ஒபாமா முதல் முக்கிய நடவடிக்கையாக கியூபாவின் குவான்டானாமோவில் உள்ள சிறைக் கூடத்தில் கைதிகளை விசாரிப்பதை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கியூப கடற்பகுதியில் உள்ள குவான்டானாமோவில் அமெரிக்க கடற்படையின் சிறை முகாம் உள்ளது.

khan20130209150812826[1]

இங்கு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என சந்தேக்கிக்கப்படுவோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன.கைதிகள் கொடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். புஷ் நிர்வாகம் இந்த சிறை முகாமை, சித்திரவதைக் கூடமாக மாற்றி விட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.பல கைதிகள், சொல்லொணா சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்த நிலையில், பதவியேற்ற கையோடு முதல் உத்தரவாக இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரிப்பதை, 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெப்ரி கார்டன் கூறுகையில், நீதியின் நலனைக் கருதியும், அதிபரின் உத்தரவையடுத்தும் சிறை முகாமில் உள்ள கைதிகளிடம் விசாரணை நடத்துவது மே 20ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுகிறது.

w460[1]

விரைவில் இதுதொடர்பான உத்தரவு நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.ஒபாமாவின் உத்தரவை, புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் போப் கேட்ஸ், வாய் மொழியாக ராணுவத்திற்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் இந்த ராணுவ சிறை முகாமை மூடுவேன் என தேர்தல் பிரசாரத்தின்போதே ஒபாமா உறுதிபடக் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது இந்த சிறை முகாமில் 250 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவார்களா என்பது தெரியவில்லை.குவான்டநாமோ சிறையில் உள்ள கைதிகளில் முக்கியமான நபர் காலித் ஷேக் முகம்மது. இவர் நியூயோர்க் இரட்டை கோபுர தாக்குதல் வழக்கில் கைதான நபர். இவரது வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது விசாரணைக்கு ஒபாமா தடை போட்டுள்ளதால் காலித் மீதான விசாரணை இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிகிறது.

Published by

Leave a comment