Category: Your Kattankudy
-
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.
-
ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!
-MJ இன்றைய நாள் 03-08-2013. இதே போன்றுதான் அன்றும் ஓர் வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன.
-
வெலிவேரிய தாக்குதல்
கம்பஹா: இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தாகம் தீர்த்த வெள்ளி இரவு (சுஹதாக்கள் தின கவிதை)
-MJ இறைவனை தொழுமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த –அந்த இஷாத் தொழுகையின் இரவில்
-
குருதியில் குளித்த கருப்பு இரவு (சுஹதாக்கள் தின கவிதை)
-பிரகாசக்கவி அழகிய இஷாப் பொழுது குருதிக் குளியல் குளித்து வேட்டுகளின் தாலாட்டோடு
-
உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங், நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (02) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.
-
கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
கொழும்பு: கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8 முதல் 13 ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5 ஆம் திகதி திறந்து வைக்கிறார்.
-
மின்சாரமில்லாத வன்னி மாவட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வன்னி: வன்னிமாவட்டத்தில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.
-
இரு மாநிலங்களாகப் பிளவுபடப்போகும் தமிழ்நாடு!
– OIT சென்னை: திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.
-
முஷர்ரப்பை சுட்டுக்கொல்ல தலிபான்கள் அமைக்கும் வியூகம்!
-OIT இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி முஷார்ரப்பை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுருப்பதாக அதிரடித்தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பாகிஸ்தான் தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் ஆறு பேர் அரசாங்கத்தில் இணைவதற்கு ஆவல்!
கொழும்பு: அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளனர் என பிரதம் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். கம்பளை வெலிகல்ல பொல்லங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்றது.