Category: Your Kattankudy
-
ரூ. 1800 கோடிக்கு ஏலம் போன பேகானின் ஓவியம்: ஓவிய வரலாற்றில் புதிய சாதனை!
– SHM நியூயோர்க்: பிரிட்டன் ஓவியர் பேகான் வரைந்த ஓவியமொன்று சுமார் 1800 கோடி ரூபாய்க்கு ஏலமெடுக்கப் பட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான். இவரது தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றான மூன்று கோணங்களில் வரையப் பட்ட ஓவியம் ஒன்று நேற்று ஏலத்தில் விடப்பட்டது.
-
வாழைச்சேனை இந்துக் கல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திட்குட்பட்ட வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் தரம் 6 தொடக்கம் 13வரையான மாணவர்களுக்கான 2012ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று(13.11.2013) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் க.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
-
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான கருத்தரங்கு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் அமானா தகாபுல் நிறுவனத்தின் அனுசரனையுடன் நீரிழிவு நோய் தொடர்பான கருத்தரங்கு நேற்று 13-11-2013 புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் சமூக நலனுக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்
PMGG ஊடகப்பிரிவு திஹாரிய: கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (12.11.2013) செவ்வாய்க்கிழமை திஹாரிய ஊர்மனைப் பிரதேசத்தில் இப்பிரதேச அரசியல் செயற்பாட்டாளர் எம்.எம். முனாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
-
அரசாங்கம் வடக்கில் ஏனைய சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – ஒரு பார்வை
அபூ அஸ்ஜத் வடக்கு மாகாண சபையின் 2 வது அமர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண ஆளுநரின் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் அதனை பகிஷகரித்து வெளிநடப்பு செய்தது தொடர்பில் பெரும் விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் எற்பட்டுள்ளது.
-
‘கொழும்பு செல்ல முயன்ற காணாமல் போனவர்களின் உறவினர்கள் தடுக்கப்பட்டனர்’
மதவாச்சி: காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அ,னுப்பி வைத்திருக்கின்றனர்
-
புயலாக மாறிவரும் வங்கக்கடல் காற்றழுத்தம்!
– SHM சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது வலுவடைந்து வருவதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாகவும், இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காத்தான்குடியில் உணவகங்கள் திடீர் பரிசோதனை
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் தலைமையிலான குழுவினர் இன்று 13-11-2013 புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள உணவகங்களுக்கு விஜயம் செய்து திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
-
2014ஆம்ஆண்டு சிறிய நாடுகளை அபிவிருத்தி செய்யும் ஆண்டாக பிரகடனம்
கொழும்பு: 2014ம் ஆண்டை சிறிய தீவு நாடுகளை அபிவிருத்தி செய்யும் ஆண்டாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுநலவாய மாநாட்டில் நிறைவேற்றி ஐநா பொதுச்சபைக்கு சிபாரிசு செய்யவுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
-
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம்
-பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (எம்.எஸ்.டப்ளியூ) சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் அமானா தகாபுல் நிறுவனத்தின் அனுசரனையுடன் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம் இன்று 13-11-2013 புதன்கிழமை மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் சமூக நலனுக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
பொது நலவாய மாநாட்டு அரச தலைவர்களின் மட்டு விஜயம் இரத்து-மாவட்ட அரச அதிபர் சார்ல்ஸ்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொது நலவாய மாநாட்டு அரச தலைவர்கள் இன்று மட்டக்களப்புக்கு செய்யவிருந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார். குறித்த விஜயம் இரத்துத் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேறு இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாலேயே குறித்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-
1776 அடி ‘புதிய உலக வர்த்தக மையம்’ அமெரிக்காவிலேயே மிக உயரமான கட்டிடமாக தேர்வு
– SHM நியுயோர்க்: அமெரிக்காவிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடமாக நியுயோர்க் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய உலக வர்த்தக மையம் அறிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா நடத்தியத் தாக்குதலில் இரட்டை கோபுரம் என்ற பெயரில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது.