Category: Your Kattankudy
-
ஸ்ருதிஹாசன் மீது மர்மநபர் தாக்குதல்!
மும்பை: மும்பையிலுள்ள நடிகை ஸ்ருதிஹாசனின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். தற்போது ‘வெல்கம் பேக்’ என்ற இந்தி படத்திலும், ‘ரேஸ் கௌரம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
-
நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்!
நிந்தவூர்: நிந்தவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 சந்தேக நபர்களில் 07 பேரை இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுவித்தார்.
-
தமிழர் என்ற அடையாளத்துடன் முரளிக்கு கருத்து வெளியிட தகுதியில்லை: ரவிகரன்
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் து. ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஜனாதிபதியின் பதாதை யாழில் தீக்கிரை!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அச்சிடப்பட்ட பதாதையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. யாழ். சென். பற்றிக்ஸ் வீதிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த பதாதையே விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
-
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கைக்குண்டுகள் மீட்பு
யாழ்ப்பாணம்: யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு விசேட அதிரடிப்டையினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய வளாகத்தினை துப்பறவு செய்யும் போது இந்தக் கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-
உள்ளுராட்சி செயலாற்றுகை போட்டியில் காத்தான்குடி நகரசபை முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை சரியானதா? PMGGயின் நகரசபை உறுப்பினர் சபீல் (நளீமி) கேள்வி
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி; காத்தான்குடி நகரசபை தவிசாளர் மற்றும் அவரது செயற்பாடுகளுக்கெதிராக பல்வேறு வகையான குற்றச் சாட்டுகள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுனர் போன்ற உயரதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்டு விசாரனைகள் இடம்பெறுகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி செயலாற்றுகை போட்டியில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி தினைக்களம்
-
யுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டது
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: வடக்கில் அனைத்து சமூகங்களின் எதிர்காலத்தினையும் கவனத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது. கடந்த 4 வருட காலத்தில் வடமாகாணம் பெற்றுள்ள அபிவிருத்திகளை எடுத்துக்காட்ட முடியும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
பிரதேச சபைக் கட்டிடத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
ஏ.எல்.எம்.தாஹிர் காலி: 220 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காலி வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபைக் கட்டிடத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (19) மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச்.குணரத்ன வீரகோன் தலைமையில் இடம்பெற்றது.
-
வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கிவைப்பு
முகம்மட் சஜீ காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வாதார உதவிகளும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை பிரதேச செயலகதில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
-
கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தியாளர்களின் கால் நடைக்கான மேய்ச்சல் தரை மற்றும் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுத்தல் சம்மந்தமான உயர்மட்ட கலந்துரையாடல்
பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தியாளர்களின் கால் நடைக்கான மேய்ச்சல் தரை மற்றும் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை மீட்டெடுத்தல் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் 19.11.2013 செவ்வாய்க்கிழமை திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில்
-
ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல்களால் போர்த்துக்கள் அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவு!
– MJ போர்டோ: நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்பா நாடுகளுக்கிடையிலான உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் சுவீடன் அணியை 3:2 எனும் கோல் கணக்கில் போர்த்துக்கள் அணி வெற்றிபெற்றதால், எதிர்வரும் 2014ம் ஆண்டு பிரேசிலில் இடம்பெறும் உலகக் கிண்ண போட்டிக்கு போர்த்துக்கள் தகுதி பெற்றுள்ளது.
-
நிந்தவூர் அசம்பாவிதம்: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 21 பேர் கைது
நிந்தவூர்: ஊர் மக்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின ருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் நிந்தவூர் பிரதேசத்தில் நேற்றுக் காலையும் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. பிரதேச மக்கள் வீதியில் இறங்கி வீதி போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்திய நிலையில் அவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.