Category: Your Kattankudy
-
தனது பின் அங்கத்தில் மறைத்துவைத்து தங்கம் கடத்த முற்பட்ட பெண் கைது!
கொழும்பு: இரண்டு தங்க பிஸ்கட்டுக்களை குதவாயில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
-
காத்தான்குடி தாருல் ஹதீத் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி பத்றிய்யா ஜும்ஆப் பள்ளி வாயலுக்கான மலசலகூட கட்டிட வேலைக்காக சுமார் 344000 ரூபா பணத்தை கையளிக்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் ஹதீத் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பனிப்பாளர் கலாநிதி U. L. அஹமது அஷ்ரப் அஸ்ஹரியின் முயற்சியால் புதிய காத்தான்குடி பத்றிய்யா ஜும்ஆப் பள்ளி வாயலுக்கான மலசலகூட கட்டிட வேலைக்காக சஊதி அரேபிய மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஸஃத் அஸ்ஸர்ஹானியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சுமார் 344 000
-
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் 600 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்,இளைஞர் யுவதிகள் ஆகியோருக்கு பெண்கள் மீதான வன்முறையை இல்லாமல் செய்தலும் பெண்களின் உரிமைகளை பாதுகாத்தலும் எனும்
-
காத்தான்குடி – அஸ்செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் – புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமையப்பெற்ற ஐம்பது வருட வரலாற்றுத் தொன்மை மிக்கதும், பழம்பெரும் பள்ளிவாயலான அஸ்செய்யது செயின் மௌலானா பள்ளிவாயல் – புதிய மூன்று மாடிகளைக்கொண்டதும், நிலக் கீழ்தள வாகனத் தரிப்பிட வசதிகளைக்கொண்டதுமானதாக, பாரியளவிலான திட்டத்துடன் அமையவுள்ளது.
-
விபத்துக்குள்ளாகிய சிரேஷ்ட ஊடகவியாலாளர் நூர்தீனை நலம் விசாரிக்கச் சென்ற பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு – கல்முனை நாவற்குடா பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியாலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீனை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி
-
சில ஊடகங்கள் எமக்கு எதிராக, இன ரீதியான பிளவுகளை தோற்று வைக்கும் வகையில் செயற்பட்டுவருகின்றன – அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: எமது வாழ்க்கை குறுகிய காலம் தான் இஎப்போது எமது மரணம் வரும் என்று தெரியாது. எனவே, நாம் வாழுகின்ற போது இஸ்லாத்திற்கு பொருத்தமாக வாழ வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது வசதிகளுக்கேற்ப வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.
-
ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா, சீனாவிற்கு உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி
– SHM நியுயோர்க்: ஈரான் மீது விதிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் தடையில் இருந்து விலக்களித்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. இந்நிலையில்,
-
புதிய பாடசாலைக் கட்டிடம் ஏறாவூரில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நேற்று மாலை திறந்து வைப்பு
– முகம்மட் சஜி ஏறாவூர்: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலைக்கான புதிய கட்டிடம் நேற்று மாலை மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
-
இலங்கை மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை?
– SHM லண்டன்: இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும்
-
தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக மு.கா தலைவர்
கொழும்பு: வீம்புக்காக போலியாகத் தமது கண்களை மூடிக்கொண்டு நாடகமாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்களைத் திறக்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. பாரிய அபிவிருத்தி கண்டுள்ள வடக்கு கிழக்கின் இன்றைய உண்மை நிலையைப் பார்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.
-
‘இறந்தவர்களை வைத்து அரசியல் நடத்த வேண்டாம்’ : பிரபா கணேசன்
கொழும்பு: இறந்தவர்கள், காணாமற்போனோர் மற்றும் அப்பாவி மலையக தொழிலாளர் வர்க்க மக்களை வைத்து சில தமிழ் அரசியல்வாதிகள் இன்று தமது அரசியல் இருப்பையும், பிழைப்பையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் தாம் கொழும்பில் சொகுசாக பொலிஸாரினதும், இராணுவ வீரர்களினதும் பாதுகாப்பிலிருந்தவாறு மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு மறைமுகமாகத் தீங்கு செய்து வருகின்றனர்.