Category: Your Kattankudy
-
‘கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் சந்தையில் விற்போம்’ போக்கோ ஹரம்
– SHM அபூஜா: நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் அடிமைகளுக்கு விற்போம் என்று போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கூறிவருகின்றனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்தி போராடி வருகிறது.
-
அஸ்ஸாமில் முஸ்லீம்கள் படுகொலை: ஜனாஸாக்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு
– S-90 குவஹாத்தி: இந்தியா, அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுத்து வருவதால் பதட்டம் நீடிக்கிறது. இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக 30 பேரை கோக்ரஜார் மற்றும் பஸ்காவில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
-
இலங்கையில் கருச் சிதைவு செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: 99 வீதமானவர்கள் திருமணம் செய்த பெண்களே!
கொழும்பு: இலங்கையில் கருச் சிதைவு செய்து கொள்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேவேளை கருச் சிதைவினை மேற்கொள்ள மகப்பேற்று மற்றும் பெண்ணியல் வைத்தியர்களை நாடி வருவோரில் 99 சத வீதமானவர்கள் திருமணம் செய்த பெண்களே ஆவர் என கண்டி போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பெண்ணியல் வைத்திய நிபுணர் டபிள்யூ. அபேகோன் தெரிவித்தார்.
-
‘தேவைப்படுமானால் பொதுபல சேனா தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் தயாராகவுள்ளேன்’ – காதர் எம்.பி.
கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாம் அவரைச் சந்திப்பதற்கு கடிதம் எழுதி அனுமதி பெறவேண்டுமா என்று பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் கேள்வியெழுப்பியுள்ளார்.
-
மத்ரசா விருது வழங்கும் வைபவம்
– A.C. அப்துல் அஸீஸ் காத்தான்குடி: குர்ஆன் மத்ரசாக்கள் அபிவிருத்தி சங்கத்தினரால் நடாத்தப்பட்ட பரீட்சையில் காத்தான்குடி ஹிழுறியா மத்ரசாவில் சி;த்திபெற்ற 12 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஹிழுறியாப் பள்ளிவாயல் நிருவாக சபையினரால், பள்ளிவாயலில் அண்மையில் இடம்பெற்றது.
-
இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் இரண்டுவான் கதவுகள் இன்று மாலை திறப்பு!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு (02) ஒரு அடி இன்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக இங்கினிமிட்டிய வதிவிட பொறியியலாளர் சுனில் பல்லேகொட சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
-
பொதுபலசேனா உறுப்பினர்களைப் பாதுகாக்க சட்டத்தைக் கையிலெடுத்த கோட்டா!
கொழும்பு: பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீடோ- சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஐந்து வருட பூர்த்தி நிகழ்வும், கணனி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கி வரும் சமூக சேவை அமைப்பான (சீடோ)- சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஐந்து வருட பூர்த்தி நிகழ்வும் கணனி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அண்மையில் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு அருகாமையிலுள்ள 167 சி பலநோக்குக் கட்டட மண்டபத்தில் இடம்பெற்றது.
-
மலேசிய விமானத்தில் 221 கிலோ லித்தியம் மின்களங்கள்: விமானம் எரிந்து விழுந்ததா?
– SHM கோலாலம்பூர்: மாயமான விமானத்தில் 221 கிலோ லித்தியம் பட்டரிகள் எடுத்துச் செல்லப்பட்டது முன்பே ஏன் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகள் குறித்து முன்பு அறிவிக்கப்பட்டது.
-
வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை முஸ்லீம்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம்!
– MJ லண்டன்: இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகச் செயற்பட்டுவரும் பொதுபலசேனா இயக்கத்தினரின் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுவரும் அடாவடித்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூரகத்திற்கு முன்னாள் தற்போது கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றது.
-
மனிதனுக்கு முன் செவ்வாயில் குடியேறப் போகும் ‘நுண்ணியிர் கிருமிகள்’
– S-90 லண்டன்: மனிதனுக்கு முன்பே செவ்வாய் கிரகத்துக்கு நுண்ணுயிர் கிருமிகள் சென்றடையும் ஆபத்து இருப்பதாக ‘நாசா’ எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தை அனுப்பி அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக அங்கு மனிதனை அனுப்பி குடியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
-
விபத்துக்குள்ளான புத்தளம் மன்னார் வீதியினை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மத் நவாஸ் காலமானார்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளம் மன்னார் வீதி 2 வது மைல்கல் அருகில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் காயமுற்ற நிலையில் புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நபர் இடைநடுவில் மரணமானதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.