Category: Your Kattankudy
-
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு: நாட்டின் ஏற்பட்ட நல்லாட்சியின் விளைவாக எதிர்க்கட்சித்தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் நல்லென்னத்தை விதைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
அகதி இல்லாதோரும் ஐரோப்பாவின் அகதிகளாகினர்!
– MJ பேர்லின்: தற்பொழுது ஐரோப்பாவிற்குள் ஏற்பட்டிருக்கும் அகதி-குடியேறிகளின் புரட்சிகள் உலக மக்களின் பார்வையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கான அனுதாபங்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றபோதிலும், நிஜத்தில் அகதி இல்லாதோரும் ஐரோப்பாவிற்குள் அகதிகளாக நுழைந்துள்ளதே உண்மையாகும்.
-
ஒரு மில்லியன் யூரோவை அகதிகளுக்கு நன்கொடையாக வழங்கியது ரியல் மெட்ரிட் கழகம்
– MJ மெட்ரிட்: சிரியாவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ள அகதிகளுக்காக மனித உரிமை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அகதிகளுக்கான நன்கொடைகளையும், சேவைகளையும் ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் முன்னணிக் கழகமும், உலகப் புகழ்பெற்ற சிறந்த கழகங்களுள் ஒன்றுமான ரியல் மெட்ரிட் ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது.
-
இனவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும்
கொழும்பு: இலங்கையில் இனவாதக் கருத்துக்களை கூறி அதன் அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளை தடை செய்ய அரசாங்கம் தயங்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனவாத செயற்பாட்டை முன்னெடுக்கும் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் இனமத பேதமின்றி தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தேசியக் கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
-
“வைபர் மூலம் ஏற்படுத்தப்படும் தொலைபேசி தொடர்புகளை தடுப்பதையோ ரகசியமான முறையில் ஒட்டு கேட்பதையோ அன்றைய இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை”: சந்திரிகா
கொழும்பு: கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், வைபர் ஹெப் தொழிற்நுட்பம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தகவல்களை பரிமாறிக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு வசதியே வைபர் ஹெப் எனப்படுகிறது.
-
அகதிகளை அழைத்துவர ஒஸ்திரியா தொடர்ந்தும் பேருந்துகளை அனுப்புகிறது
வியன்னா: ஹங்கேரியில் பலநாட்களாக நிர்க்கதியான நிலையில் உள்ள குடியேறிகளை அழைத்துவருவதற்காக ஒஸ்திரிய அதிகாரிகள் ஹங்கேரியின் எல்லைக்கு இரண்டாவது நாளாகவும் பேருந்துகளை அனுப்பியுள்ளனர். அழைத்துவரப்பட்டவர்கள் முதற்கட்ட முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
-
ஐ.எஸ். அடிமைகளின் பாலியல் சந்தை: தப்பிவந்த இளம் பெண்ணின் கண்ணீர்க் கதை
– SHM ரக்கா: ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் பாலியல் அடிமை சந்தை பற்றி தப்பி வந்த 18 வயது யசிதி இன யுவதி தெரிவித்துள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்களை கடத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர். மேலும் அவர்களை பாலியல் அடிமை சந்தைகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகளிடம் இருந்து 18 வயது யசிதி இன பெண் ஜினான் தப்பி வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் பற்றி கூறுகையில்,
-
ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் போடும் 11 நிபந்தனைகள்
– AF-90 மொசூல்: ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில் உள்ள அல் கர்யாதீன் நகரில் வசிக்கும் ஏராளமான கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து திம்மா என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெற பிற மதத்தவர்கள் திம்மா எனப்படும் 11 விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுடன் ஜிஸ்யா என்ற வரியை செலுத்த வேண்டும்.
-
இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ்ஸின் சர்ச்சைக்குரிய நேற்றைய ஆட்டமிழப்பு (காணொளி)
– MJ லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் பெண் ஸ்டோக்ஸ்ஸிற்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு அங்கு தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் அழைப்பு
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தன்குடி: கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார். காத்தன்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில், காத்தன்குடி குர்ஆன் சதுக்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
“ராஜாங்க அமைச்சையோ, பிரதியமைச்சர் பதவியையோ தான் ஏற்க போவதில்லை” பௌசி
கொழும்பு: அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று தான் இன்னும் எதிர்பார்ப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார். ராஜாங்க அமைச்சையோ, பிரதியமைச்சர் பதவியையோ தான் ஏற்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.பௌசி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
-
“மஹிந்த ஆட்சிக்கு வந்திருந்தால் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்”: சந்திரிக்கா
கொழும்பு: மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை பொலிஸ் ஆட்சியாக இருந்தது. இந்நிலையில் மஹிந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், நாட்டில் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட செய்தியாளர்களுடன் இந்தியாவில் வைத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சந்திரிக்கா, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து மீளவே, மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.