Category: Your Kattankudy
-
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்
பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
-
சாய்ந்தமருதில் சர்வதேச எழுத்தறிவு தின விஷேட நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தின விஷேட நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
-
5 அமைச்சர்கள் கடமையேற்பு
விஜயதாஸ ராஜபக்ஷ – நீதி அமைச்சர் டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன-தொழிலாளர் மற்றும் தொழில் நலன்புரி அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – கமத் தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர – கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி – பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்
-
பயணிகளுக்கு மது அளிக்க மறுத்த இஸ்லாத்தை ஏற்ற விமானப் பணிப்பெண் இடைநிறுத்தம்!
– AF-90 அட்லாண்டா: அமெரிக்கா, அட்லாண்டாவை சேர்ந்த எக்ஸ்பிரஸ் ஜெட் நிறுவனம் பயணிகளுக்கு மது வழங்க மறுத்ததால் தன்னை பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்துள்ளதை எதிர்த்து விமானப் பணிப்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அட்லாண்டா நகரைச் சேர்ந்தது எக்ஸ்பிரஸ் ஜெட் விமான நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக வேலை செய்து வருபவர் சாரி ஸ்டான்லி (40). அவர் கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றார்.
-
தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு
கொழும்பு: கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி நுவரெலியா அகரபத்தன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். வஸீம் தாஜுதீனின் விபத்துக்குள்ளான பகுதியில் குறித்த யைடக்கத் தொலைபேசியை கண்டெடுத்துள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் ஒரு மலிங்கவை கண்டுபிடித்த வசிம் அக்ரம் (காணொளி)
கராச்சி: மலிங்காவை போல் பந்துவீசும் திறமை கொண்ட ஒருவரை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் கராச்சி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களுக்கு பந்துவீச்சு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரமுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
-
நான்கு அமைச்சுப் பதவிக்காக எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரை: தொடர்கிறது சிக்கல்
கொழும்பு: நான்கு அமைச்சுப் பதவிகளுக்காக எட்டு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட பதினைந்து அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளில் மேலும் நான்கு பதவிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
-
மட்டு. மாவட்டத்தில் ஏழு தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் குடிநீர் வசதிகள் நிவர்த்தி
எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய தமிழ், முஸ்லிம் கிராம பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் வசதிக்கான தேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் யுத்தம் மற்றும் இயற்கை அணர்தங்களினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தியடைந்து வரும் பின் தங்கியுள்ள கிராம பாடசாலைகளில் மாணவர்கள் சுத்தமான நீரினை அருந்துவதற்கான வசதிகள் மிக நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாமல் இருந்து வந்தது.
-
வளைகுடா நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?
லண்டன்: பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக உதவ வேண்டும் என்கிற பரவலான, வலுவான கோரிக்கைகளை உருவாக்கியுள்ளது.
-
இருபதாயிரம் அகதிகளை ஏற்க பிரிட்டன் ஒப்புதல்
லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், சிரிய அகதிகள் இருபதாயிரம் பேரை பிரிட்டனுக்குள் மீளக்குடியமர்த்தப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார். நேற்று பிரிட்டன் பாராளுமன்றத்தில் இவ் ஒப்புதல் அறிக்கையை பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்திருந்தார்.
-
குடியேறிகளால் ஜெர்மனி பெரும் மாற்றமடையும்: அங்கேலா மேர்க்கெல்
பேர்லின்: ஜேர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்திருக்கிறார். அகதித்தஞ்சக் கோரிக்கைகளை வேகப்படுத்துவது மற்றும் புதிய குடியேறிகளுக்கான வீடுகளைக் கட்டுவது ஆகியவையும் இந்த திட்டங்களுக்குள் அடங்கும்.